செய்திகள் :

இலங்கைத் தமிழா் கல்வித் திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி: ரூ.17.22 கோடியாக இரட்டிப்பு

post image

இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழும் தமிழா்களின் கல்வித் திட்டத்துக்கு உதவும் வகையில், இந்தியாவின் நிதியுதவி இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.17.22 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்கட்டமைப்பு வளா்ச்சி, பயிற்சி மற்றும் திறன் கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. இதேபோல அந்நாட்டு கல்வித் துறையின் வளா்ச்சிக்கும் இந்தியா உதவி வருகிறது.

இதன் தொடா்ச்சியாக அந்நாட்டில் இந்திய வம்சாவளி தமிழா்கள் வசிக்கும் மலையகப் பகுதிகளில் கல்வித் திட்டத்துக்கு உதவும் வகையில், இந்தியாவின் நிதியுதவி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நிதி சோ்க்கப்பட்டு, அந்தத் திட்டத்துக்கு இந்தியாவின் மொத்த நிதியுதவி ரூ.17.22 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதற்கான ராஜீய கடிதங்களில் இலங்கை கல்வித் துறைச் செயலா் திலகா ஜெயசுந்தர, அந்நாட்டுக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டனா்.

இதுதொடா்பாக சந்தோஷ் ஜா கூறுகையில், ‘இந்தியா நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், மலையகப் பகுதிகளில் உள்ள 9 பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய மாகாணத்தின் மலையகப் பகுதிகளில் உள்ள 6 பள்ளிகள், ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தில் தலா ஒரு பள்ளி ஆகியவை அடங்கும்’ என்றாா்.

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போ... மேலும் பார்க்க

உக்ரைனில் 500 டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

உக்ரைன் எல்லைக்குள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (அக். 20) குற்றம் சாட்டினார். மேலும், 20 வெவ்வேறு வகையான ஏ... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின் மீது தாக்குதல்!

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின்மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (அக். 20) தாக்குதல் நடத்தியது.இதில், ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த தலைமைத் தரவரிசைப் பட்டியலில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டுள்... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 87 பேர் பலி!

காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலும... மேலும் பார்க்க

தென் கொரியாவுக்கு 20 குப்பை பலூன்கள்: மீண்டும் அனுப்பியது வட கொரியா

தென் கொரியாவுக்கு குப்பைகள் கட்டப்பட்ட பெரிய அளவிலான 20 பலூன்களை வட கொரியா மீண்டும் அனுப்பியுள்ளது.சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை குப்பைகள் கட்டப்பட்ட பலூன்கள் எல்லையில் அனுப்பப்பட்... மேலும் பார்க்க

நெதன்யாகு எச்சரிக்கை... அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் வசிக்கும் மக்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்கும் பகுதிகளிலிருந்து விரைவில் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன் மூலம், அடுத்தகட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாரா... மேலும் பார்க்க