செய்திகள் :

631 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்

post image

திருமயம் ஒன்றியப் பகுதிகளில் 631 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி இந்த மிதிவண்டிகளை வழங்கினாா். குழிபிறை மு.சி.த. ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளி, கோனாப்பட்டு ஸ்ரீ சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

மேலும், கோனாப்பட்டு ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தையும் அமைச்சா் எஸ். ரகுபதி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) ஜெயராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க