செய்திகள் :

Serial Update: `அன்று வருத்தம்; இன்று வாய்ப்பு'- சன் டி.வியின் புதிய சீரியல்; மீண்டும் இணையும் ஜோடி

post image
குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி சினிமா, சீரியல் என இப்போது வரை பிஸியாக இருப்பவர் நீலிமா ராணி. சன், ஜீ தமிழ் உள்ளிட்ட முக்கிய சேனல்கள் எல்லாவற்றிலும் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகி உள்ளன.

ஆரம்பத்தில் ராடான் சீரியல்களில் இவர் நடித்த போது இவருடன் ஜோடியாக நடித்தவர் நடிகர் அருண். 'வாணி ராணி' தொடரில் டிம்பிள் - சூர்யா என்கிற இவர்களின் காம்பினேஷனுக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது நினைவிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இருவரும் தனித்தனியே தங்களது கரியரில் பிஸியாகி விட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் மீண்டும் அதாவது ஒன்பதாண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோடியாக 'வானத்தைப் போல' தொடரில் கமிட் ஆனார்கள் இருவரும்.

'வானத்தைப் போல' சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த ஒரு ஹிட் சீரியல். இதில் முதலில் அருண் கமிட்டாக, அவருக்கு ஜோடியாக நீலிமாவை ஒப்பந்தம் செய்தார்கள்.

அருண், நீலிமா ராணி.

அப்போதே, 'நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் சீரியல் பக்கம் வரேன். அதனால் என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி பாத்துக்கோங்க' என தயாரிப்புத் தரப்பிடம் கேட்டுக் கொண்டே நடிக்க சம்மதம் சொன்னாராம் நீலிமா.

இருவரும் கமிட் ஆகி நடிக்கத் தொடங்கி இவர்களது கேரக்டர் கொஞ்சம் பிக் அப் ஆகத் தொடங்கிய வேளையில் என்ன பிரச்சனையோ தெரியவில்லை, திடீரென தொடர் முடிந்துவிட்டது. நல்ல டி.ஆர்.பி. கிடைத்து வந்த நிலையில் ஏன் சீரியலை முடித்தார்கள் என்பது சேனலுக்கே வெளிச்சம்.

இதனால் இருவரும் ரொம்பவே அப்செட் ஆனார்கள். பெரியதொரு இடைவெளிக்குப்  பிறகு அதுவும் முன்பு பிரபலமாக அறியப்பட்ட அதே காம்பினேஷனில் கமிட் ஆனதால் இந்த சீரியல் நல்ல கம்பேக்காக அமையுமென எதிர்பார்த்த நீலிமா இதனால் ரொம்பவே வருத்தப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.

ஆனால் அப்போது சேனல் தரப்பிலிருந்து இதைச் சரி கட்டும் விதமாக ஏதாவது செய்து தரப்படும் எனச் சொன்னதாகவும் தகவல் வெளியானது.

இப்போது அதைச் செய்து தந்திருக்கிறது சேனல். விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் ஒன்றில் மீண்டும் அருண்-நீலிமா ஜோடியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்கள்.

அடுத்த சில தினங்களில் ஷூட்டிங் கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடருக்கு 'ராகவி' எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

Bigg Boss Tamil 8: `standby arunprasath' - வீடியோ பகிர்ந்து அருணுக்கு ஆதரவளித்த அர்ச்சனா

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி உள்ளிட்ட பதினெட்டுப் பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.Bigg ... மேலும் பார்க்க

Kayal & Karthigai Deepam: தீபாவை நெருங்கும் பேராபத்து | மூர்த்தி பற்றி அறியும் கயல்?

கயல்-எழில் திருமணம் முடிந்தும் நிம்மதி கிடைக்காதுபோல. இந்த சீரியலில் மட்டும் தான் தினமும் ஒரு புது பிரச்னை வருகிறது. கயலின் அண்ணன் மூர்த்தி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 16: முத்துவோட லவ் ஸ்டோரி; என்னை அக்கான்னு கூப்பிடறாங்க - தர்ஷாவின் சிணுங்கல்

இன்றைய எபிசோடு சற்றாவது சுவாரசியமாக அமைந்ததற்கு காரணம், ‘ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்’. ஆண்கள் போட்ட டீலை, ‘குத்தினா கத்துவேன், கத்தினா குத்துவேன்’ என்கிற மாதிரி ராஜதந்திரத்துடன் கையாண்டு பெண்கள் அணி டபாய்த்... மேலும் பார்க்க

BB Tamil 8: `தோழி செளந்தர்யாவுக்கு நான் சொல்லி அனுப்புன விஷயம்'- `பிக் பாஸ்' விஷ்ணு சொல்வதென்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8 கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர் அருண், நடிகை பவித்ரா, மாடல் சௌந்தர்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன்... மேலும் பார்க்க

Kayal & Siragadikka aasai: உயிருக்குப் போராடும் மூர்த்தி | ரோகிணியின் அடுத்த வில்லத்தனம்

சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை சீரியலில் வில்லத்தனம் செய்வதில் ரோகிணி விஜயாவை முந்திவிட்டார். விஜயா படபடவென பேசுவார். மற்றபடி திருட்டு வேலைகள் செய்வது, சதி செய்வது, ஏமாற்றுவது போன்ற செயல்களைச் செய்யமாட்டா... மேலும் பார்க்க

BB Tamil 8: `அருண் சொல்லிக் கொடுத்துதான் அர்ச்சனா டைட்டிலை வென்றாரா?' - ரவீந்தர் ஓப்பன் டாக்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன்ல் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ரவீந்தர். அவரை சந்தித்துப் பேசினோம்.ரவீந்தர் " எனக்கு இதுக்கு முன்னாடி ... மேலும் பார்க்க