செய்திகள் :

Kayal & Karthigai Deepam: தீபாவை நெருங்கும் பேராபத்து | மூர்த்தி பற்றி அறியும் கயல்?

post image
கயல்-எழில் திருமணம் முடிந்தும் நிம்மதி கிடைக்காதுபோல. இந்த சீரியலில் மட்டும் தான் தினமும் ஒரு புது பிரச்னை வருகிறது. கயலின் அண்ணன் மூர்த்தி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அவருக்கு என்னவானது என்பது வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. கயலின் தம்பி மட்டும் தான் உடன் இருக்கிறார். கயல் மூர்த்தியில் நண்பர்களுக்கு கால் செய்து பார்க்கிறார். ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்பது கயலுக்குப் புரிகிறது.

Kayal serial

சிவசங்கரிக்கு தீபிகாவின் அப்பா தான் ஏதோ செய்திருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது. இனி அடுத்து வரும் எபிசோடுகளில் மூர்த்திக்கு இப்படி ஆனது கயல் எப்படி கண்டுப்பிடிக்கிறார் என்ற கோணத்தில் கதை நகரலாம். சிவசங்கரி செய்த விஷயங்கள் எழிலுக்குத் தெரிய வந்தால் பெரிய பிரச்னை வெடிக்கும். 

கார்த்திகை தீபம்

ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் கார்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவைத் தேடும் முயற்சியாக கார்த்திக் ஒட்டிய போஸ்டரை ரூபஸ்ரீ பார்க்கிறார். அதனை ஐஸ்வர்யாவிடம் சொல்ல நினைத்து ரூபா, அவரின் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால் அவர் அங்கு இல்லை. கைதாகிச் சிறையில் இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. அதன் பிறகு தீபாவைச் சந்திக்க காவல் நிலையம் வருகிறார். இருவரும் நடந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆக இருவரும் ஏதோ மிகப்பெரிய சதி செய்யப் போகிறார்கள். 

கார்த்திகை தீபம்
Karthigai Deepam

மற்றொருபுறம் ஆசிரமத்தில் இருக்கும் சக்தி தீபாவை எப்படியாவது கச்சேரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். ஆசிரமக் குழந்தைகளுடன் சேர்த்து வேனில் அழைத்துச் செல்லலாம், யாரும் கண்டுப்பிடிக்க மாட்டார்கள் என பிளான் செய்கின்றனர்.  

தீபா கச்சேரிக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தான் கார்த்தி ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டுகிறார். ஆனால் அவருக்கு இருக்கும் தடைகள் பற்றி கார்த்திக்கு இன்னும் முழுதாகத் தெரியவில்லை. ஐஸ்வர்யா ஜெயிலில் இருந்து தப்பிக்க திட்டமிடுகிறார். ப்ரோமோவில் பார்த்தபோது அவர் ஜெயிலில் இருந்து தப்பி  விட்டார். 

மற்றொருபுறம் ரவுடிகள்  தீபாவை கொல்ல நினைக்கின்றனர். ஆக எல்லாப் பக்கமும் தீபாவுக்கு ஆபத்துக்கு சூழ்ந்திருக்க, சக்தி அவரை பத்திரமாக வேனில் அழைத்து வருகிறார். கார்த்திக், அபிராமி கச்சேரிக்கு தீபா வர வேண்டும் என் பூஜை செய்கின்றனர்.

கார்த்திகை தீபம்
Karthigai Deepam

ஐஸ்வர்யா ஜெயிலில் இருந்து தப்பிக்க மருத்துவமனை செல்ல வேண்டும் என்று நடிக்கிறார். மருத்துவமனையில் டாக்டரிடம் துப்பாக்கி காட்டி, நர்ஸ் ஆடையணிந்து, மாஸ்க் அணிந்து தப்பிக்கிறார். கையில் துப்பாக்கியுடன் தீபாவை கொல்ல கிளம்புகிறார். துங்காவும் ரவுடிகளுடன் தீபாவை கொல்ல கிளம்பிவிட்டார். அடுத்த எபிசோடில் தெரிந்து விடும் தீபா எப்படி தப்பிக்கப் போகிறார் என்பது!  

BB Tamil 8 Day 16: முத்துவோட லவ் ஸ்டோரி; என்னை அக்கான்னு கூப்பிடறாங்க - தர்ஷாவின் சிணுங்கல்

இன்றைய எபிசோடு சற்றாவது சுவாரசியமாக அமைந்ததற்கு காரணம், ‘ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்’. ஆண்கள் போட்ட டீலை, ‘குத்தினா கத்துவேன், கத்தினா குத்துவேன்’ என்கிற மாதிரி ராஜதந்திரத்துடன் கையாண்டு பெண்கள் அணி டபாய்த்... மேலும் பார்க்க

BB Tamil 8: `தோழி செளந்தர்யாவுக்கு நான் சொல்லி அனுப்புன விஷயம்'- `பிக் பாஸ்' விஷ்ணு சொல்வதென்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8 கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர் அருண், நடிகை பவித்ரா, மாடல் சௌந்தர்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன்... மேலும் பார்க்க

Kayal & Siragadikka aasai: உயிருக்குப் போராடும் மூர்த்தி | ரோகிணியின் அடுத்த வில்லத்தனம்

சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை சீரியலில் வில்லத்தனம் செய்வதில் ரோகிணி விஜயாவை முந்திவிட்டார். விஜயா படபடவென பேசுவார். மற்றபடி திருட்டு வேலைகள் செய்வது, சதி செய்வது, ஏமாற்றுவது போன்ற செயல்களைச் செய்யமாட்டா... மேலும் பார்க்க

BB Tamil 8: `அருண் சொல்லிக் கொடுத்துதான் அர்ச்சனா டைட்டிலை வென்றாரா?' - ரவீந்தர் ஓப்பன் டாக்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன்ல் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ரவீந்தர். அவரை சந்தித்துப் பேசினோம்.ரவீந்தர் " எனக்கு இதுக்கு முன்னாடி ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 15: ஆண்கள் போட்ட டீலை, டீலில் விட்ட பிக் பாஸ்; இந்த வாரம் Mixed Nomination!

இப்போதைக்கு பெண்கள் அணியின் பக்கம் காற்று நன்றாக வீசுகிறது. தர்ஷிகா இரண்டாவது முறையாக கேப்டன் ஆகி விட்டார். ஆண்கள் அணியில் இரண்டு பேர் குறைந்து எண்ணிக்கையில் சுருங்கி விட்டார்கள். எனவே, ‘ஆண்கள் யாரையு... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ``அந்த சம்பவத்துக்குப் பிறகு என் ரஞ்சித் சிரிக்கவே இல்ல..!" - ப்ரியா ராமன்!

பிக் பாஸ் சீசன் 8 நடந்துக் கொண்டிருக்கிறது. `ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு' என தன்னுடைய பாணியில் களத்தை அழகாக நகர்த்தி கொண்டுபோகிறார், விஜய் சேதுபதி.முதல் வாரத்தில் சத்தமில்லாமல் அமைதியாகவே இருந்த ரஞ்ச... மேலும் பார்க்க