செய்திகள் :

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை!

post image

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.420 கோடி நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் தலைவர்களுடனான தொடர்பில் இருந்து விலகியிருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு 50 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளதாக பில்கேட்ஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நான் நடிகர் அஜித்தின் பெரிய ரசிகன்: துல்கர் சல்மான்

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பில்கேட்ஸ், நன்கொடை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தத் தேர்தல் வித்தியாசமானது என்றும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதார கொள்கைகள், குடும்பக் கட்டுப்பாடு, உலகளாவிய சுகாதாரத் திட்டங்கள் பற்றி கவலை தெரிவித்துள்ளார்.

ஆனால், நான் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேட்பாளர்களை ஆதரிக்கிறேன். நான் நீண்டகாலமாக பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பயணித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது! ப.சிதம்பரம்

பில்கேட்ஸின் முன்னாள் மனைவி, மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸும், கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பிரசாரக் குழுக்களுக்கு அதிகளவில் நன்கொடைகளை வழங்கியுள்ளார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, உலகப் பணக்காரர்களில் முதலிடத்திலும் டெக்னாலஜி துறையில் அசைக்கமுடியாதவராக இருக்கும் எலான் மஸ்க் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தனது ஆதரவை அளித்துள்ளார்.

முதல்தரப் போட்டிகளில் அதிவேக இரட்டைச்சதம்: நியூஸி.வீரர் சாதனை!

அமெரிக்கா அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயக கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் ஜோ பைடன்(81) போட்டியிடுவதாக இருந்தது.

எனினும், டிரம்ப்புடன் நேரடி விவாதத்தில் தடுமாறியது, பிரசாரத்துக்கு மத்தியில் கரோனா தொற்று, வயது மூப்பு உள்பட பல முக்கியக் காரணங்களால் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலை 20-ஆம் தேதி திடீரென அறிவித்தார். ஜோ பைடன், தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து துணை அதிபா் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்தாா்.

பெங்களூரு விபத்து: கட்டட உரிமையாளரின் மகன் கைது!

ஜோசியராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முதல்வர்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஜோசியராக மாறியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களி... மேலும் பார்க்க

பெங்களூரு விபத்து: கட்டட உரிமையாளரின் மகன் கைது!

பெங்களூரில் கட்டுமானப் பணியில் இருந்த 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழ... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு: இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.இது குறித்த... மேலும் பார்க்க

பெங்களூரு கட்டட விபத்து: ஒருவர் பலி; 14 பேர் மீட்பு!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் இருந்த 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.இந்த சம்... மேலும் பார்க்க

தீபாவளி: நெல்லை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெரிசலை குறைப்பதற்காக அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்அக். 29-ல் சென்னை சென்ட்ரலில் இரு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 25 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கார... மேலும் பார்க்க