செய்திகள் :

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தின் அவல நிலை! - சீரமைப்பார்களா அதிகாரிகள்?

post image

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, கழிவுநீர் உள்ளே செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று அப்பகுதி மக்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோது, பழைய பேருந்து நிலையத்தின் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனால், தற்போது பழைய பேருந்து நிலையம் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது. அப்போதைய நகராட்சி நிர்வாகம், பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அங்கு வணிக வளாகம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தாலும், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த இடம் முற்றிலும் குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவுநீர் கால்வாய் உடைந்து உள்ளே செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.

பரபரப்பான அந்தச் சாலையில், ஒரே நிமிடத்தில் பல வாகனங்கள் கடந்து செல்கின்றன. சாலையோரம் வெளியேறும் கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் முகம் சுளித்தபடியே அந்த இடத்தைக் கடந்து செல்கின்றனர். சிலர் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, “இது பல வருடங்களாகவே இப்படித்தான் உள்ளது, இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் எங்களுக்குத்தான் துர்நாற்றமும், நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்தைச் சுத்தம் செய்து, இங்கு குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்” என்றனர்.

மேலும், இந்த பழைய பேருந்து நிலையத்தையொட்டி காய்கறி மார்க்கெட், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் அமைந்துள்ளன. இவ்விடத்தில், பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டாலும், இரவு 10 மணிக்குப் மேல் ஆட்கள் நடமாட்டம் குறைவது வழக்கமாகிவிட்டது. இதனால், இந்த பகுதி சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. இங்கு பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதுடன், மக்கள் நடந்து செல்லும் பாதைகளில்கூட சிலர் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில் மட்டுமே காவல்துறையினரின் கவனம் உள்ளது. இதனால், பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் கழிவறைகளை மூடியதால், இந்த இடம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. இதன் மூலம் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக, பழைய பேருந்து நிலையத்தை முறையாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. சீரமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா?

தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீர்; அச்சத்துடனே பயணிக்கும் மக்கள் - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திண்டுக்கல் மாவட்டம், பழைய கரூர் சாலையில் மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான தரைப்பாலம் ஒன்று உள்ளது. ரயில்வே கேட் அடிக்கடி போடுவதால் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்... மேலும் பார்க்க

Bomb Threat: விமான நிறுவனங்களுக்குத் தலைவலி தரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; அலைக்கழிக்கப்படும் பயணிகள்

கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அன்றாடம் தவறாமல் இடம்பெறும் ஒரு செய்தி... விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள். இவற்றின் திடீர் அதிகரிப்பால் அண்மைக் காலமாக ஏராள... மேலும் பார்க்க

வயநாடு: முதன் முறையாகத் தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி; வேட்புமனு தாக்கலுடன் இன்று பேரணி!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. விதிமுறைகளின் ஏதாவது ஒரு தொகுதிய... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சரிந்துவிழும் நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருப்பத்தூரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலையின்நடுவே வரிசையாக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், பேருந்து நிலையத்தின் முன் அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்றுதற்போது சேதமடைந்தது, பொதுமக்... மேலும் பார்க்க

BSNL: இனி நோ `கனெக்டிங் இந்தியா', ஒன்லி `கனெக்டிங் பாரத்'; காவி மயமாக்கப்பட்ட பி.எஸ்.என்.எல் லோகோ!

மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் (Prasar Bharati), தூர்தர்ஷன் இந்தி செய்தி சேனலின் லோகோ நிறம், கடந்த ஏப்ரலில் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் இதற்கு அரசியல் எதிர... மேலும் பார்க்க

PMK: ``தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே'' - அன்புமணி

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி வரவிருக்கிறது. லட்சக் கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பவுள்ளனர். இதற்கான அரசு போக்குவரத்து முன்பதிவுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்... மேலும் பார்க்க