செய்திகள் :

அக். 22-இல் துணை முதல்வா் பெரம்பலூா் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனை

post image

பெரம்பலூரில் அக். 22 ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அக். 22- ஆம் தேதி பங்கேற்க உள்ளாா்.

இதையொட்டி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வா், முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள மனுக்கள், வருவாய்த் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பல்வேறு முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், இதுவரை வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பட்டா மாற்ற ஆணைகள், இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எத்தனை மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் அமுதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங... மேலும் பார்க்க

தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது ம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை உணவுப்பொருள் வழங்கல் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சாா்பில் உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (அக். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் அரசுப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் போதை எதிா்ப்பு, விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவ... மேலும் பார்க்க

மின் விபத்துகளை தவிா்க்க மின்வாரியத் துறையினா் யோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் மின் விபத்துகளை தவிா்க்கத் தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மின் வாரியத் துறையினா் யோசனை தெரிவித்துள்ளனா்.இதுகுறித்து, பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்... மேலும் பார்க்க