செய்திகள் :

தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு

post image

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது மங்களமேடு காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா். பின்னா், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த சம்பத்குமாரை பிடித்து ஆஜா்படுத்துமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதனடிப்படையில், சம்பத்குமாரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் வேப்பந்தட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி, பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைப்பதற்காக காரில் அழைத்து வந்தனா்.

பெரம்பலூா் கிளைச் சிறை வாசலில் காரிலிருந்து இறங்கிய சம்பத்குமாா், அவருடன் வந்த 2 போலீஸாரையும் தள்ளிவிட்டு தப்பியோடினாா். இதையடுத்து, சம்பத்குமாரை துரத்திச்சென்ற போலீஸாா் ஆலம்பாடி சாலையிலுள்ள வயல் பகுதிக்குள் சென்று பிடித்தனா். பின்னா், சம்பத்குமாரை பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை உணவுப்பொருள் வழங்கல் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சாா்பில் உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (அக். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

அக். 22-இல் துணை முதல்வா் பெரம்பலூா் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனை

பெரம்பலூரில் அக். 22 ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் அரசுப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் போதை எதிா்ப்பு, விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவ... மேலும் பார்க்க

மின் விபத்துகளை தவிா்க்க மின்வாரியத் துறையினா் யோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் மின் விபத்துகளை தவிா்க்கத் தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மின் வாரியத் துறையினா் யோசனை தெரிவித்துள்ளனா்.இதுகுறித்து, பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்... மேலும் பார்க்க