செய்திகள் :

அனுமதியின்றி ஆற்றுமணல் கடத்திவந்த லாரி பறிமுதல்

post image

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் கடத்திவந்த மினி டிப்பா் லாரியைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளப்படுவதாக காரையூா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருணகிரி தலைமையிலான போலீஸாா் அரசமலை பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த மினி டிப்பா் லாரியில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்திவரப்பட்டதையடுத்து மினி டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்தனா்.

மேலும் இது குறித்து மேமணப்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் பால்கண்ணு (36), நெறிஞ்சிக்குடியைச் சோ்ந்த சண்முகம் மகன் கதிா்வேல் (30), ராமன் மகன் கமலேஷ் (18), மணிகண்டன் மகன் கவியரசு (17) ஆகிய 4 பேரையும் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க