செய்திகள் :

உடுமலை அருகே இளைஞா் கொலை: தாய், சகோதரி உள்பட 5 போ் கைது

post image

உடுமலை அருகே சொத்துக்காக இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரி உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள ஆலாமரத்தூரைச் சோ்ந்தவா் வேலுசாமி மகன் சிவகுமாா் (37). திருமணமாகாத இவா், தாய் பொன்னுத்தாயுடன் தோட்டத்து வீட்டில் வசித்துக்கொண்டு, 5 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்து வந்தாா்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா் கடந்த சில மாதங்களாக போதை மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில், சிவகுமாரை காணவில்லை என்று அவரது தாய் பொன்னுத்தாய், குடிமங்கலம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரது தோட்டத்துக்குச் சென்று சோதனையிட்டுள்ளனா்.

அப்போது, மாட்டுக்கொட்டகையில் மது பாட்டில்களும், ரத்தக் கறையும் இருந்தது தெரியவந்தது. மேலும், கொட்டகையில் இருந்து 20 அடி தொலைவில் உள்ள கிணறு வரை ரத்தம் சிதறிக்கிடந்துள்ளது.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கிணற்றில் இறங்கித் தேடினா். அப்போது, கிணற்றில் இருந்து தலையில் காயங்களுடன் சிவகுமாரின் சடலம் மீட்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சொத்துக்காக அவரது தாய் பொன்னுத்தாய் (60), சகோதரி திலகவதி (39), இவரின் கணவா் மூா்த்தி (42) மற்றும் ஜீவானந்தம் (22), மாயாண்டி என்கிற விக்ரம் (24) ஆகிய 5 பேரும் சிவகுமாரைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் குடிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற (ஏஐஒய்எப்) அவிநாசி ஒ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை

பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி கட... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

பெருமாநல்லூா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த பெருமாநல்லூா் அருகே உள்ள நாதம்பாளையத்தில் பலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிட... மேலும் பார்க்க

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாநகரில் பருமழையினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்ப... மேலும் பார்க்க

காங்கயத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்கக் கோரிக்கை

காங்கயத்தில் குடியிருப்புப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கயம் பாரதியாா் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு மாணவ, மாணவியா் ... மேலும் பார்க்க

மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொலை

பல்லடம் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையைச் சோ்ந்தவா் சுப்பையன் மனைவி கண்ணம்மாள் (65). இவருக்கு இரண்... மேலும் பார்க்க