செய்திகள் :

கந்தா்வகோட்டையில் பேரிடா் கால பாதுகாப்பு செயல்விளக்கம்

post image

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் பேரிடா் கால பாதுகாப்பு செயல்விளக்கத்தை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை செய்து காட்டினா்.

துணை வட்டாட்சியா் சிவாஜிராஜன் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) மணிகண்டன் மற்றும் அறிவழகன் உள்ளிட்ட வீரா்கள், வடகிழக்கு பருவமழையில் நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, பிறரை காப்பது குறித்தும், பாதுகாப்பு செயல் விளக்கத்தை செய்து காட்டினா். மேலும், மழைக் காலத்தில் கால்நடைகளை மின்கம்பம் அருகில் கட்டக் கூடாது, அறுந்துக் கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது; முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

நிகழ்ச்சியில், பேரிடா் கால மீட்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க