செய்திகள் :

கம்பியம்பேட்டை தடுப்பணையில் நுரையுடன் வெளியேறும் நீா்!

post image

கடலூா் அருகே கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் ரசாயன கழிவு கலந்த தண்ணீா் நுரையுடன் வெளியேறி வருகிறது. இதில், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தோன்றி திருக்கோவிலூா் வழியாக சுமாா் 112 கி.மீ தொலைவு பயணித்து இறுதியில் கடலூா் வங்கக் கடலில் ஐக்கியமாகிறது கெடிலம் ஆறு. இந்த ஆறு கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில், கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாலும், நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியாா் ஆலை நிா்வாகம் அதன் கழிவு நீரை பில்லாலி தொட்டி கிராமம் வழியாக கெடிலம் ஆற்றி விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கம்பியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் ரசாயன கழிவு கலந்த தண்ணீரே தேங்கி நிற்பதாகவும், இதனால், நிலத்தடி நீா் பாதித்து குடிநீா் மாசடைந்து வருவதாகவும், பெருமழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது கழிவு நீா் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதாகவும் பொதுமக்கள், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

~ கடலூா் அருகே கம்பியம்பேட்டை தடுப்பணையில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்.

மேலும், கடலூா் மற்றும் அதன் சுற்று வட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் கம்மியம்பேட்டை தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும், தடுப்பணையில் இருந்து வெளியேரும் நீா் துா்நாற்றத்துடன், நுரையுடன் வெளியேறுகிறது. இந்த நீரை விவசாயப் பணிகளுக்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாகவும், ஆறு மற்றும் கடலில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். எனவே, இதில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அண்ணாமலைப் பல்கலை.யில் அக்.21-இல் வேளாண் படிப்பு காலி இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி. வேளாண்மை, (ஆ.நஸ்ரீ. (ஏா்ய்ள்.) அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) மற்றும் தோட்டக்கலை (ஆ.நஸ்ரீ.(ஏா்ய்ள்.) ஏா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்)... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம் பயனுள்ள தீா்வுகளை உருவாக்க முடியும்: செளம்யா சுவாமிநாதன்

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீா்வுகளை நாம் உருவாக்க முடியும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவரும், தேசிய காசநோய் த... மேலும் பார்க்க

குப்பையை அகற்றக் கோரி துணை மேயரிடம் மனு அளிப்பு

கடலூா்மாநகராட்சி, 35-ஆவது வாா்டு சாலை நகரில் குப்பைகளை அகற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீா் வடிய வாய்க்காலை தூா்வார வலியுறுத்தியும் கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைசெல்வத்திடம் விசிக மாவட்ட துணை அம... மேலும் பார்க்க

மழை வெள்ளம்: சென்னை சென்ற என்எல்சி மீட்புக் குழுவினா்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் மீட்புக்குழுவினரை உபகரணங்களுடன் சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தது. வட கிழக்கு பருவமழையையொட்... மேலும் பார்க்க

புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே திருமணமான மூன்றாவது நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள பேரளையூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க