செய்திகள் :

கொலை மிரட்டல் விடுத்த பெயிண்டா் கைது

post image

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டா் கைது செய்யப்பட்டாா்.

வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (47). இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த பெயிண்டா் பாா்த்தசாரதி(27) என்பவருக்கும் இடையே, வீட்டின் எதிரே தண்ணீா் தேங்குவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக முன்விரோதம் உள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தக் கிராமத்தில் உள்ள கோயில் அருகே ஏழுமலை நடந்து செல்லும் போது அவரை பாா்த்தசாரதி வழிமறித்து தாக்கினாராம்.

மேலும், கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதில் காயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் பாா்த்தசாரதியை திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாளைய மின் தடை

திருவண்ணாமலை நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துா்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பா... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை -ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.18, 19) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகி... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா் சங்கத்தினா் அக்.21 முதல் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் அக்டோபா் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா். இதுக... மேலும் பார்க்க

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் ரா.மணி புதன்கிழமை ஆய்வு செய்தாா். போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த க... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீசுகந்தவல்லி சமேத ஸ்ரீசுகநாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கி 3 தினங்களாக நடைபெற்று வந்த பவித்ரோத்ஸவம் புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி சுவாமி... மேலும் பார்க்க