செய்திகள் :

ஜோலார்பேட்டை: 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம்.. குடிநீர், கழிவறை வசதியின்றி திண்டாடும் அவலம்!

post image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் முக்கிய ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் செல்லும். தினமும் 190-க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன.

தமிழகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல், சுகாதார கேடாக உள்ளது என்று பயணிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையம் வந்துசெல்கின்றனர். இருப்பினும், இந்த ரயில் நிலையத்தில் கழிவறை, குடிநீர், கேன்டீன் வசதி, ஓய்வறை போன்ற பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்

மேலும், ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் அடிக்கடி குடிநீர் வராமல் போய்விடுவதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக இங்கு பொதுக் கழிவறை இல்லாததால் இங்கு வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். சிலர் ஆங்காங்கே வெட்டவெளியில் சிறுநீர் கழிப்பதால் பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதனால், இங்கு வரும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் நோய் பரவும் அபாயம் உருவாகியிருக்கிறது. இது குறித்து இங்கு வந்துசெல்லும் ஒரு பயணியிடம் பேசியபோது, `இந்த ரயில் நிலையத்தில் பத்து நிமிடங்களுக்கு ஒரு ரயில், பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வருகிறது. ஆனால், இதெல்லாம் இருந்து என்ன பயன்? அவசரத்துக்கு ஒரு கழிவறை இல்லையே' என்று அவர் வேதனையடைந்தார். அதேபோல், பெண் பயணி ஒருவர், `இவ்வளவு மக்கள் வந்து செல்லும் இடத்தில் அடிப்படையாக ஒரு கழிவறை கூட இல்லையென்றால் எப்படி. பெண்கள் நாங்களெல்லாம் எங்கே செல்வது?' என ஆதங்கப்பட்டார்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்

இவர்களைப் போல மக்கள் பலரும் தினமும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ``அதிகாரிகள் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வருகின்றோம். ஆனால், ரயில்வே நிர்வாகம் இந்த கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்குமா? என்று தெரியவில்லை" என்கின்றனர் பொதுமக்கள்.

Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!' - ஆவின் விளக்கம்

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கிரீன் மேஜிக் எனும் பச்சை நிற பாக்கெட் பாலை, கிரீன் மேஜிக் பிளஸ் எனப் பெயர் மாற்றம் செய்து, லிட்டருக்கு ரூ. 11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை எனவும், ஆவின் உடனடியாக இதை... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை' - ஆளுநரின் ஆலோசகர் விளக்கம்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

கோவை உக்கடம் குளத்தில் `மிதக்கும் சோலார்' மின் உற்பத்தி நிலையம்.. | Photo Album

சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்கண்காணிப்பு காமிராக்கள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (... மேலும் பார்க்க

விருதுநகர்: `நகராட்சியோடு இணைக்கத் தேவையில்லை’ - கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டத்தின் பின்னணி

விருதுநகர் மாவட்டம் , கூரைக்கூண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி அந்தப் பகுதியை போராட்ட களமாய் மாற்றியது. விருதுநகர் நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாகதரம் உ... மேலும் பார்க்க

Train ticket: `இதுவரை 120... இனி 60 நாள்கள்' - ரயில் டிக்கெட் ப்ரீ-புக்கிங் நடைமுறையில் மாற்றம்!

இதுவரை 120 நாள்களுக்கு முன்பே, ரயில் டிக்கெட்டை புக் செய்துவிட முடியும். ஆனால், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து, ரயில் டிக்கெட்டை, பயணம் மேற்கொள்ளும் 60 நாள்களுக்கு முன்புதான் புக் செய்ய முடியும். ரயில்... மேலும் பார்க்க

Satellite Spectrum: `ஏலம் விடுவதா?’ எலான் மஸ்க் Vs அம்பானி நிறுவனங்கள் - மத்திய அரசு முடிவென்ன?

இந்தியாவில் தொலைத் தொடர்பு, இணைய சேவைகள், இரண்டு முறைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை பெருவாரியான இடங்களில், டவர் அமைத்துதான் வழங்கப்பட்டு வருகிறது. வயாசாட், ஓம் டெலிகாம், சிபி டெக்னாலஜிஸ், ரில... மேலும் பார்க்க