செய்திகள் :

Satellite Spectrum: `ஏலம் விடுவதா?’ எலான் மஸ்க் Vs அம்பானி நிறுவனங்கள் - மத்திய அரசு முடிவென்ன?

post image

இந்தியாவில் தொலைத் தொடர்பு, இணைய சேவைகள், இரண்டு முறைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை பெருவாரியான இடங்களில், டவர் அமைத்துதான் வழங்கப்பட்டு வருகிறது. வயாசாட், ஓம் டெலிகாம், சிபி டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் செயற்கைக்கோள் வழியாகவும் சேவைகள் வழங்கி வருகின்றன. பார்தி ஏர்டெல் நிறுவனமும் செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

செல்போன் டவர்

இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்டாா்லிங்க், அமேசான் நிறுவனத்தின் குப்பியா், பாரதி குழுமத்தின் ஒன்வெப் யூடெல்சாட், எஸ்.இ.எஸ்-ஜியோ இணைந்து நடத்தும் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள்கள் மூலம் தொலைத்தொடா்பு சேவைகள் வழங்க ஆர்வம்காட்டி வருகின்றன. எனவே, இரு வகையான நிறுவனங்களுக்கு மத்தியில் வணிகப் போட்டி நடைப்பெறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்த இரு வகையான தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் சமமான வணிக சந்தையை ஏற்படுத்திக் கொடுக்க தீவிரம் காட்டிவருகிறது.

அதற்காக, செயற்கைக்கோள் வழியாக இணையச் சேவை வழங்குவதற்கான அகண்ட அலைவரிசையை, நிறுவனங்களுக்கு ஏலம் விடும் முறையில் வழங்காமல், ஒதுக்கீடு முறையில் வழங்கலாம் என TRAI மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

TRAI-யின் இந்தப் பரிந்துரைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக, மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு, கடந்த வாரம் ஜியோ நிறுவனம் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது. அதில், ``அலைக்கற்றை விவகாரத்தில் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கிறது. அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமற்ற நடைமுறை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தது.

ஜியோ - ஸ்டார்லிங்க்

அதேபோல, ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவாக ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலும், ``நகர்ப்புறங்களில் சில்லரை வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்க விரும்பும் செயற்கைக்கோள் வழி இணைய நிறுவனங்கள், தொலைதொடர்பு நிறுவனங்களைப் போலவே, உரிமக் கட்டணம் செலுத்தச் செய்ய வேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான விதிகள் அனைத்தும் அவற்றுக்கும் பொருந்தும். அலைக்கற்றை உரிமத்தை, செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களும் விலை கொடுத்து வாங்க வேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க்கை பணம் செலுத்தி பெறச் செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.

ஜியோ நிறுவனத்தின் இந்த செயல்பாடுகளுக்கு கடுமையான எதிர்வினையாற்றிய 'ஸ்டார்லிங்க்' தொலைத் தொடர்பு நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், ஏல நடைமுறையின் போது லாபி செய்யப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி, தன் எக்ஸ் பக்கத்தில், ``செயற்கைக்கோள் அகண்ட அலைவரிசைக்கு, ஏல நடைமுறையை அமல்படுத்த, இந்திய அரசுக்கு முகேஷ் அம்பானி அழுத்தம் அளித்துவருவது, இதுவரை எந்த வகையான நடைமுறையிலும் இல்லாதது. உலகளவில் செயற்கைக்கோள் வழி அகண்ட அலைவரிசை உரிமம் நிர்வாகரீதியாக ஒதுக்கீடு செய்யப்படுவதே நடைமுறை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு பெரும் நிறுவனங்களுக்கு மத்தியில் இருந்த புகைச்சல் இந்தப் பதிவுகளால் வெளிச்சத்துக்கு வந்தது.

அம்பானி - மஸ்க்

இந்த நிலையில்தான், மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா, ``உலகம் முழுவதும் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் நிர்வாக ரீதியாகவே ஒதுக்கப்படுகிறது. எனவே, இந்தியாவும் இதே உலகில்தான் இருக்கிறது. வேறுபட்ட முறையில் செயல்படவில்லை. விலை நிர்ணயம் என்னவாக இருக்கும் என்பதை தீர்மானிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அரசியலமைப்பின் மூலம் அதிகாரம் பெற்றுள்ளது. எனவே, இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலம் முறையில் நடைபெறாது" எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!' - ஆவின் விளக்கம்

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கிரீன் மேஜிக் எனும் பச்சை நிற பாக்கெட் பாலை, கிரீன் மேஜிக் பிளஸ் எனப் பெயர் மாற்றம் செய்து, லிட்டருக்கு ரூ. 11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை எனவும், ஆவின் உடனடியாக இதை... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை' - ஆளுநரின் ஆலோசகர் விளக்கம்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

கோவை உக்கடம் குளத்தில் `மிதக்கும் சோலார்' மின் உற்பத்தி நிலையம்.. | Photo Album

சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்கண்காணிப்பு காமிராக்கள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டை: 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம்.. குடிநீர், கழிவறை வசதியின்றி திண்டாடும் அவலம்!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் முக்கிய ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் செல்லும். தி... மேலும் பார்க்க

விருதுநகர்: `நகராட்சியோடு இணைக்கத் தேவையில்லை’ - கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டத்தின் பின்னணி

விருதுநகர் மாவட்டம் , கூரைக்கூண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி அந்தப் பகுதியை போராட்ட களமாய் மாற்றியது. விருதுநகர் நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாகதரம் உ... மேலும் பார்க்க

Train ticket: `இதுவரை 120... இனி 60 நாள்கள்' - ரயில் டிக்கெட் ப்ரீ-புக்கிங் நடைமுறையில் மாற்றம்!

இதுவரை 120 நாள்களுக்கு முன்பே, ரயில் டிக்கெட்டை புக் செய்துவிட முடியும். ஆனால், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து, ரயில் டிக்கெட்டை, பயணம் மேற்கொள்ளும் 60 நாள்களுக்கு முன்புதான் புக் செய்ய முடியும். ரயில்... மேலும் பார்க்க