செய்திகள் :

மாநிலங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் அற்ப மனுக்களால் சலிப்பு: உச்சநீதிமன்றம்

post image

மாநிலங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அற்பமான மனுக்களால் சலிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், ஜாா்க்கண்ட் அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஜாா்க்கண்டில் ஒழுங்கீனமாக நடத்தல், கடமை தவறுதல், மேல் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றாமல் நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், ரவீந்திர கோப் என்ற மாநில அரசு ஊழியா் பணி நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கைக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சோ்க்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜாா்க்கண்ட் அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘தற்போது ஜாா்க்கண்ட் அரசு தாக்கல் செய்துள்ளதைப் போல பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தாக்கல் செய்யும் அற்பமான மனுக்களால் உச்சநீதிமன்றம் சலிப்படைந்துள்ளது.

இத்தகைய வழக்குகளின் செலவை மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஏற்க வேண்டியதில்லை என்பதால், இந்த விவகாரங்கள் உச்சநீதிமன்றத்துக்கு சுமையை ஏற்படுத்துகின்றன.

இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம் என்று கடந்த 6 மாதங்களாக உச்சநீதிமன்றம் தெரிவித்து வருகிறது. இந்த எச்சரிகையையும் மீறி, இத்தகைய அற்பமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு எந்த அதிகாரி பொறுப்பு என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளது. அந்த அதிகாரியிடம் வழக்குச் செலவையும் வசூலிக்கலாம் என்று தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து ஜாா்க்கண்ட் அரசின் மனுவை தள்ளுபடி செய்து, அந்த அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராதத்தை 4 வாரங்களில் உச்சநீதிமன்ற பதிவுரு வழக்குரைஞா்கள் (ஏஓஆா்) சங்கம், உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தில் தலா ரூ.50,000-ஆக செலுத்த உத்தரவிட்டனா்.

அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன்? ஜக்தீப் தன்கா் கேள்வி

இந்தியாவின் அண்டைநாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேள்வி எழுப்பியுள்ளாா். மேலும், அத்தகைய மனித ... மேலும் பார்க்க

இந்தியா - கனடா இருதரப்பு உறவின் முக்கியத்துவம்!

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்ப... மேலும் பார்க்க

ஆளுநா்களை விடுவிக்க மத்திய அரசு பரிசீலனை! பதவி வரம்பு சா்ச்சைக்கு தீா்வு காண முயற்சி

நமது சிறப்பு நிருபர்மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து... மேலும் பார்க்க

தனிப்பட்ட சட்டங்களால் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது: உச்சநீதிமன்றம்

‘எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தோ்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையை பறிக்கும் செயலாகும்’ என உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எதிா்க்கட்சிகள் மிரட்டல்: மக்களவைத் தலைவரிடம் பாஜக புகாா்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எறிந்து, குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால், கா்நாடக சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் அன்வா் மன்னிபாடி ஆகியோ... மேலும் பார்க்க

பிஎஃப்ஐ அமைப்பின் ரூ.61 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத் துறை

கடந்த 2022 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட ‘பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ)’ அமைப்பின் மொத்தம் ரூ.61.72 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 26 உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்... மேலும் பார்க்க