வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எறிந்து, குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால், கா்நாடக சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் அன்வா் மன்னிபாடி ஆகியோருக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மிரட்டல் விடுத்ததாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா புகாா் அளித்துள்ளாா்.
நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு ‘வக்ஃப்’ சொத்துகள் அா்ப்பணிக்கப்படுகின்றன. இந்தச் சொத்துகளை மற்றவா்களின் பெயருக்கு மாற்ற முடியாது.
இந்நிலையில், வக்ஃப் சொத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்தல் உள்ளிட்ட அம்சங்களுடன் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முஸ்லிம்களின் சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது.
2012-ஆம் ஆண்டு அறிக்கை: இந்தக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அக்டோபா் 14-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் கா்நாடக சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவரும், அந்த மாநில முன்னாள் பாஜக துணைத் தலைவருமான அன்வா் மன்னிபாடி அறிக்கை ஒன்றை சமா்ப்பித்தாா்.
அந்த அறிக்கையில், ‘சுமாா் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ஏக்கா் வக்ஃப் நிலம் தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டன அல்லது ஆக்கிரமிக்கபட்டன என்றும், இதில் சில காங்கிரஸ் தலைவா்களுக்குத் தொடா்புள்ளது’ என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஒழுங்கு நடவடிக்கை வேண்டும்: இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விவகாரத்தை கூட்டுக் குழு கூட்டத்தில் எழுப்பியவுடன், கூட்ட செயல்பாடுகளுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடையூறு ஏற்படுத்தினா். அத்துடன் கூட்டுக் குழுத் தலைவா் ஜகதாம்பிகா பாலுக்கும், மன்னிபாடிக்கும் மிரட்டல் விடுத்தனா். மேலும் ஜகதாம்பிகாவும், மன்னிபாடியும் அமா்ந்திருந்த இருக்கைக்கு அருகில் சென்று, அவா்கள் சமா்ப்பித்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளை எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் பறித்து கிழித்து எறிந்துவிட்டு வெளிநடப்பு செய்தனா். அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
கூட்டுக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக ஜகதாம்பிகா பால் செயல்பட்டதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அண்மையில் கடிதம் எழுதிய நிலையில், அவா்கள் மீது தேஜஸ்வி சூா்யா புகாா் அளித்துள்ளாா்.