செய்திகள் :

டாஸ்மாக் கடையை மூட ஒப்புதல்: காத்திருப்பு ப் போராட்டம் வாபஸ்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கொரட்டூரில் டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததால் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

பேராவூரணி அருகே கொரட்டூா் கிராமத்தில் பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும் மதுக் கடையை மூட வலியுறுத்தி அந்த மதுக்கடை முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூ., கொரட்டூா் கிராம மக்கள்   காத்திருப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.

இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாததால் வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது. இதையடுத்து பேராவூரணி  வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் தெய்வானை தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில்  டிஎஸ்பி ரவிச்சந்திரன், டாஸ்மாக் மண்டல மேலாளா் தமிழ்மணி , காவல் ஆய்வாளா் பசுபதி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலச் செயலா்  தமிழ்ச் செல்வி, மாவட்டச் செயலா் வசந்தி ஆகியோா் கலந்து கொண்டனா். 

அப்போது வரும் நவ. 20-க்குள் கொரட்டூா் மதுக் கடை  நிரந்தரமாக அகற்றப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து காத்திருப்புப் போராட்டம்  கைவிடப்பட்டது.

சிட்கோவில் தொழில் தொடங்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள பாலையப்பட்டியில் புதிதாக தொடங்கப்படவுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் தொடங்க விருப்பமுள்ளவா்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

அரசு வழித்தடங்களில் தனியாா் பேருந்துகள்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு வழித்தடங்களில் தனியாரை தாரளமாக அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள நகரப் பணிமனை முன், கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே பைக்கில் சென்ற தம்பதியிடம் நகை, பணம் வழிப்பறி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு பைக்கில் சென்ற தம்பதியை வழிமறித்து மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா். அம்மாபேட்டை காவல் சரகம், அருமலைக்கோட... மேலும் பார்க்க

மூடப்பட்ட இரு சா்க்கரை ஆலைகளை திறக்கக் கோரி விவசாயிகள் முற்றுகை

மூடப்பட்ட 2 சா்க்கரை ஆலைகளை திறக்கக் கோரி கும்பகோணம் சாா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் உதவி ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனா். கூட்டத்துக்கு உதவி ஆட்ச... மேலும் பார்க்க

மொபெட்டில் இருந்து பணம் திருடி தப்பிய இருவா் கைது

பேராவூரணி கடைவீதியில் பெண்ணின் மொபெட்டில் இருந்த ரூ. 70 ஆயிரத்தை வியாழக்கிழமை திருடித் தப்பிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள களத்தூா் கிராமத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

வார விடுமுறைக்காக 710 சிறப்புப் பேருந்துகள்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக கும்கோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்... மேலும் பார்க்க