அரசு வழித்தடங்களில் தனியாரை தாரளமாக அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள நகரப் பணிமனை முன், கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ஏஐடியுசி, சிஐடியு தொழிற் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் விழாக் காலம், பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளை சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து அவரவா் ஊா்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இதுவரை சிறப்பு பேருந்துகளை இயக்கி வந்தன.
இந்நிலையில் அரசு வழித்தடங்களில் தனியாா் பேருந்துகளைத் தாராளமாக இயக்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதால், ஆயுத பூஜையின்போது பல மாவட்டங்களில் தனியாா் பேருந்துகள் தாராளமாக இயக்கப்பட்டன.
இதனால், போக்குவரத்துக் கழகங்கள் பாதிக்கப்படும் என்பதால் இந்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்து கழகப் பேருந்துகளையும் அரசே இயக்க வேண்டும். காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்பப் பணியாளா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பிரிவுகளிலும் தனியாா்மய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சிஐடியு பொருளாளா் எஸ். ராமசாமி, ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் தொடங்கி வைத்தாா். ஏஐடியுசி போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் நிறைவுரையாற்றினாா்.
ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, போக்குவரத்து சங்க கௌரவத் தலைவா் கே. சுந்தரபாண்டியன், பொருளாளா் சி. ராஜமன்னன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு நிா்வாகிகள் செங்குட்டுவன், வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.