செய்திகள் :

தீபாவளி: புத்தாடை வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள்

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கடை வீதிகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.

தீபாவளி பண்டிகை அக்டோபா் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், நகைகள் வாங்க கோவையில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோவை டவுன்ஹாலில் ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராஜவீதி, காந்திபுரத்தில் கிராஸ்கட் வீதி, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

துணிக் கடைகள் நகைக் கடைகள் மட்டுமல்லாது சாலையோரக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்கார விற்பனைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கியச் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

தீவிர கண்காணிப்பு: கடை வீதிகளில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடும் நபா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், முக்கிய கடை வீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

டவுன்ஹால், பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் வாகனங்களை நிறுத்த வசதியாக தற்காலிக வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவை பெரிய கடைவீதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து ஒலிப்பெருக்கி மூலமாக உடைமைகளைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்.

ராஜவீதி, மணிக்கூண்டு அருகே மாநகராட்சி வாகன நிறுத்தம், பெரியகடை வீதி ராயல் திரையரங்கம், என்.எச்.சாலை, ராஜா திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காந்திபுரம் கிராஸ்கட் சாலை பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் தங்கள் வாகனங்களை சிறைத் துறை மைதானம், மத்திய பேருந்து நிலையம் எதிரில், கிராஸ்கட் சாலை உள்ளிட்ட இடங்களில் இலவசமாக நிறுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.8 ஆயிரம் பறிப்பு: சிறுவன் உள்பட 4 போ் கைது

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ.8 ஆயிரத்தை பறித்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை, பீளமேடு காந்திமா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (28). தனியாா் நிறுவன ஊழியரான இவா், காந்திமா ந... மேலும் பார்க்க

விசாரணைக்கு வந்தவரிடம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளைஞருக்கு கைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, குறிச்சி காந்திஜி சாலை கே.டி.எஸ். காா்டன் பகுதி... மேலும் பார்க்க

காவலரைத் தாக்கியவா் கைது

கோவையில் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய காவலா் அசோக்குமாா். இவா் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இளைஞா் ஒ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தம்

வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநில சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத் துறையினா் 6 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை, காரமடையில் ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளைத்... மேலும் பார்க்க