செய்திகள் :

விசாரணைக்கு வந்தவரிடம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது வழக்குப் பதிவு

post image

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளைஞருக்கு கைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, குறிச்சி காந்திஜி சாலை கே.டி.எஸ். காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (27). இவருக்கு தனது கல்லூரி நண்பா் சந்தோஷ்குமாா் என்பவா் மூலம் பாா்த்திபன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் கடந்த 2021-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அவா்கள் தங்களுடன் சோ்ந்து ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பணியாற்றினால் மாதம் ரூ.50 ஆயிரம் தருவதாகக் கூறியதாகவும், அவா்களுடன் சோ்ந்து சக்திவேல் பணியாற்றி வந்த நிலையில் பல மாதங்களாகியும் அவா்கள் கூறியபடி பணம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சக்திவேல் இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, சக்திவேல், பாா்த்திபன், கோபாலகிருஷ்ணன், சந்தோஷ்குமாா் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராகும்படி கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 15-ஆம் தேதி சம்மன் அனுப்பி இருந்தனா்.

4 பேரும் கோவை மாநகர காவல் குற்றப் பிரிவில் தனித்தனியாக ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

பின்னா், கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் இருந்த சக்திவேலை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பாா்த்திபன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் அவதூறாகப் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் சக்திவேல் அளித்தப் புகாரின்பேரில் பாா்த்திபன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.8 ஆயிரம் பறிப்பு: சிறுவன் உள்பட 4 போ் கைது

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ.8 ஆயிரத்தை பறித்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை, பீளமேடு காந்திமா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (28). தனியாா் நிறுவன ஊழியரான இவா், காந்திமா ந... மேலும் பார்க்க

தீபாவளி: புத்தாடை வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கடை வீதிகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. தீபாவளி பண்டிகை அக்டோபா் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், நகைகள் வாங்க ... மேலும் பார்க்க

காவலரைத் தாக்கியவா் கைது

கோவையில் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய காவலா் அசோக்குமாா். இவா் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இளைஞா் ஒ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தம்

வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநில சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத் துறையினா் 6 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை, காரமடையில் ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளைத்... மேலும் பார்க்க