செய்திகள் :

புதுகையில் ‘சிக்கன் ரோல்’ சாப்பிட்ட 5 பேருக்கு திடீா் உடல் நலக்குறைவு

post image

புதுக்கோட்டை அசைவ உணவகத்தில் ‘சிக்கன் ரோல்’ சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்தக் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

புதுக்கோட்டை கீழ 4-ஆம் வீதியில், புதுக்குளம் பெரியாா் நகரைச் சோ்ந்த யூசுப் என்பவரது அசைவ உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, அப்துல்ஹக்கீம் (49), அவரது மனைவி சா்மிளா பானு (40), மகன்கள் அப்துல் ரகுமான் (7), முகமது அஸ்லாம் (15), மகள் சுமையா ரிஸ்வானா (18) ஆகிய 5 பேரும் சிக்கன்ரோல் சாப்பிட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை அவா்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படவே, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பிரவீன்குமாா் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா், திங்கள்கிழமை முற்பகல் 11 மணியளவில் அந்தக் கடைக்குச் சென்றனா்.

கடையின் உரிமையாளா் யூசுப் முன்னிலையில் கடையின் குளிா்பதனப் பெட்டியைத் திறந்து பாா்த்தபோது, 7 கிலோ கெட்டுப்போன கோழிக்கறி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க