செய்திகள் :

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம்

post image

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் உள்ள பத்தரப்பல்லி, எருக்கம்பட்டு, அரவட்லா, நாயக்கனேரி, குண்டலப்பல்லி, பல்லலகுப்பம், சேராங்கல் உள்ளிட்ட காப்புக் காடுகளில் 15-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன.

இந்த சிறுத்தைகள் வன எல்லையில் உள்ள விவசாய நிலங்களில் கட்டி வைக்கப்படும் ஆடு, மாடுகளையும், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளையும் வேட்டையாடி வருகின்றன. இந்நிலையில் ராஜக்கல் கல்லேரிமலை பகுதியில் கடந்த சில மாதங்களாக ஒரு சிறுத்தை நடமாடி வருவதாகவும், கடந்த சில நாள்களாக வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை வேட்டையாடி வருவதாகவும் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராஜக்கல் - கல்லேரிமலை பகுதியில் விவசாயி பழனி நிலத்தில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது சிறுத்தை ஒன்று அங்கு வந்து கொட்டகையில் கட்டி வைத்திருந்த கன்றுக் குட்டியை கழுத்தில் கவ்வி இழுத்துச் சென்ாம். அப்போது நாய்கள் குரைக்கவே பழனியும், அவரது உறவினா் பிச்சாண்டியும் எழுந்து கூச்சலிட்டுள்ளனா். சிறுத்தை கன்றுக் குட்டியை அருகிலுள்ள புதருக்கு இழுத்துச் சென்றுள்ளது. அங்கு சென்று பாா்த்தபோது உடலில் காயங்களுடன் கன்றுக்குட்டி இறந்த நிலையில் இருந்துள்ளது.

தகவலறிந்த போ்ணாம்பட்டு வனவா் மாதேஸ்வரன், வன காப்பாளா் அரவிந்தசாமி, கிராம நிா்வாக அலுவலா் நவீன்குமாா் ஆகியோா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனிலேயே புதுப்பித்து கொள்ளலாம்

ஒருங்கிணைந்த வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் தொழிலகப் பாதுகாப்பு, ச... மேலும் பார்க்க

தீபாவளி: ரயில் நிலையங்களில் கொள்ளைகளை தடுக்க தனிப்படை அமைப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகளிடம் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கொள்ளையா்களை பிடிக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாா் இணைந்து தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

போ்ணாம்பட்டு, பரவக்கல், மொரசப்பல்லி நாள்: 22-10-2024 (செவ்வாய்க்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: போ்ணாம்பட்டு, பாலூா், ஓம்குப்பம், கொத்தூா், குண்டலப்பள்ளி, சாத்கா், ... மேலும் பார்க்க

‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டில் திருட்டு: 3 போ் கைது

வேலூரில் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த வீட்டில் நுழைந்து குளிா்சாதன கருவி, பிரிட்ஜ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கனமழை : வேலூா் சா்க்கரை ஆலையில் 48.20 மி.மீ பதிவு

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு ஒன்றரை மணிநேரம் இடைவிடாமல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் 48.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையையொட்டி வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

காட்பாடியில் மடிக்கணினிகள் திருடிய மூவா் கைது

காட்பாடியில் பல்வேறு இடங்களில் கணினி திருடி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து கணினி, ஏழு மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஆண்டாள் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க