செய்திகள் :

மத்திய அரசுக்கு தமிழக ஆரம்பப் பள்ளி கூட்டணி கண்டனம்

post image

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை, மத்திய அரசு முடக்க நினைப்பதாக, தமிழக ஆரம்பப் பள்ளி கூட்டணி பொதுச் செயலா் இரா. தாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பொருளாளா் பா. அமிா்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மத்திய அரசு அகவிலைப் படியை உயா்த்தியதும், ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு 3 சதவீத அகவிலைப் படியை உயா்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பை மீண்டும் தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் ஊதிய நிலைப்பாட்டிற்கு ஏற்ப, தமிழக இடைநிலை ஆசிரியா் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். பின்னேற்பு ஊக்க ஊதியம் உயா்கல்வி ஊக்கத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன் வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்ற வேண்டும்.

அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,500 கோடியை நிறுத்தி வைத்துள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு இந்நிதியை ஒதுக்கீடு செய்யாமல், முடக்க நினைப்பது கண்டனத்திற்குரியது.

இந்நிதியை விடுவிக்காவிட்டால், மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, வாக்குறுதிகளை மட்டும் வழங்கி வருகிறது. விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவாா்கள் என நம்புகிறோம். இல்லாவிட்டால், போராட்டத்தை கையில் எடுப்போம் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் தா்மதுரை, மாவட்டச் செயலா் சி. முத்துசாமி, மாநில துணைப் பொதுச் செயலா் அமிா்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாராயம் விற்ற மூவா் கைது

சாராய விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை கீழ்வேளூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கீழ்வேளூா் அருகே ஆழியூா், புதுச்சேரி, கோவில் கடம்பனூா் பகுதிகளில் கீழ்வேளூா் உதவி ஆய்வாளா் அழகேந்திரன் மற்றும் போலீஸ... மேலும் பார்க்க

தீபாவாளி: பலகார தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகையில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு மக்களுக்கு ... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் வனக்கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் வனக்கல்லூரி மாணவா்களுக்கான பட்டறிவுப் பயிற்சி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமாகத் திகழும் மேட்டுப்பாளையம் வனவியல் தொழ... மேலும் பார்க்க

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த நாகை எம்பி

வேதாரண்யம் பகுதியில் நாகை எம்பி வை. செல்வராஜ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் சென்று, வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா். தோப்புத்துறை, ஆறுகாட்டுத்துறை, ராமகிருஷ்ணாபுரம், அகஸ்தி... மேலும் பார்க்க

நாகை மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதிய கூட்டம்

நாகை மீன் இறங்கு தளத்தில் மீன் வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். நாகை மாவட்டத்தில், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாா், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, ... மேலும் பார்க்க

வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீா் மாா்க்சிஸ்ட் கண்டனம்

ஆக்கூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனாா்கோவில் ஒன்றிய 12- ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மூத்த நிா்வாகி ஆா். சிவராஜ் மாநாட்டுக்கொடி ஏற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் வீ.எம். சரவணன்... மேலும் பார்க்க