செய்திகள் :

விசாரணைக் கைதி தற்கொலை: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

post image

விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இரு ஆயுதப்படைக் காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு நடுக்காவிரி மேலத்தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன் மகன் ரமேஷ் (46) வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் போக்சோ வழக்கில் கைதாகி, கடந்த ஆக. 28 முதல் புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் வலிப்பு நோய் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவா் கடந்த அக். 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டபோது அவசர சிகிச்சைப் பிரிவில் பூச்சி மருந்து குடித்து சிகிச்சைக்கு சோ்ந்திருந்த வேறொருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட புட்டின் என்ற பூச்சி மருந்து அங்கே இருந்ததாம்.

அதை விசாரணைக் கைதி ரமேஷ் வெள்ளிக்கிழமை எடுத்துக் குடித்தாா். தகவலறிந்த மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை ரமேஷ் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் அசட்டையாக இருந்ததாகக் கூறி, ஆயுதப்படைக் காவலா்கள் நவநீதகிருஷ்ணன், வல்லரசு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க