செய்திகள் :

ஹாலிவுட், பாலிவுட் மிகவும் வித்தியாசமானது..! மனம்திறந்த பிரியங்கா சோப்ரா!

post image

தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து, பாலிவுட், ஹாலிவுட் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் குடியேறினார்.

திருமணத்துக்கு பிறகு ஹாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக அமெரிக்க படமான லவ் அகெய்ன் படம் வெளியானது.

இதற்கடுத்து ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் படத்தில் நடித்துள்ளார். தி ஃபிளப் படத்தில் 19ஆம் நூற்றாண்டின் கரீபியன் பெண் திருடியாகவும் நடித்துள்ளார். இந்தப் படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

தற்போது, சிட்டாடல் தொடரின் 2ஆவது சீசன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் அவரது மேக்ஸ் ஃபேக்டர் நிறுவனத்துக்கு 2021-2024 வரை விளம்பரத் தூதராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தியா வந்துள்ளார்.

சமீபத்தில் மும்பைக்கு வந்திருந்த பிரியங்கா சோப்ரா நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசியிருந்தார். அதில் ஹாலிவுட், பாலிவுட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ஏற்கனவே ஊதியம் குறித்து பேசியதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா கூறியதாவது:

ஒவ்வொரு நாடும் பொதுவாக வித்தியாசமானவை. ஒவ்வொருவருக்கும் அவரவர் கலாச்சாரம் ரீதியிலான முறையில் வேலை செய்கிறோம். ஹாலிவுட், பாலிவுட் சினிமாக்களில் நான் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்கிறேன்.

ஹாலிவுட்டில் மிக அதிகமான திட்டமிடல் இருக்கும். படப்பிடிப்பின் ஒரு நாளைக்கு முன்பாக 100 ஈ-மெயில்கள் வரும். நேரம் மிகவும் சரியாக குறிப்பிட்டிருக்கும். சில நேரங்களில் நாம் இரவு எத்தனை மணிக்கு படப்பிடிப்பை முடித்தோம் என்பதைப் பொருத்து மாறும். மற்றபடி மிகவும் சரியாக நேரத்தை திட்டமிட்டு செயல்படுவார்கள். நமக்கு அந்த நேரத்தில் வேறு எதுவும் செய்யமுடியாது.

ஆனால் பாலிவுட்டில் (ஹிந்தி சினிமா துறையில்) நாங்கள் குறைவான செலவில் எதாவது யோசித்து புதியதாக செய்வோம். அப்படி செய்தாலும் குறிப்பிட்ட நேரத்திலும் தேவையானதை செய்துவிடுவோம். சில நேரங்களில் எங்களது சிந்திக்கும் சக்தி இயல்பாகவே இருக்கிறது என நினைக்கிறேன். இது எனக்கு ஹாலிவுட்டில் வித்தியாசமான நடைமுறையாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனி வழி இருக்கும். அதைத் தவிர்த்து படப்பிடிப்பு எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்றார்.

தண்டகாரண்யம் முதல் பாடல்!

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல்வேறு படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம... மேலும் பார்க்க

பிரதர் படத்தின் புதிய பாடல் விடியோ..!

ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள... மேலும் பார்க்க

அமரன் டிரைலர்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்... மேலும் பார்க்க

மலையாளத்தில் நடிக்கும் தமிழ் சீரியல் நடிகை!

மலர், மோதலும் காதலும் உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை அஸ்வதி மலையாளத் தொடரில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அபூர்வராகம் என்ற தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறா... மேலும் பார்க்க

நடிகர் பாலா 4-வது திருமணம்!

பிரபல நடிகர் பாலா 4-வது திருமணம் செய்துள்ளார். இயக்குநர் சிவாவின் சகோதரரான நடிகர் பாலா தமிழில் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது, மலையாளப் படங... மேலும் பார்க்க

500 மில்லியன் பார்வைகளைக் கடந்த கவர்ச்சி பாடல்..! தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு விடியோ!

நடிகை தமன்னாவின் பாடல் விடியோ ஒன்று 500 மில்லியன் (50 கோடி) பார்வைகளைக் கடந்தது குறித்து பதிவிட்டுள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என பலரு... மேலும் பார்க்க