செய்திகள் :

உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்தவரால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி!

post image

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்த வீரர் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், சொந்த மண்ணில் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிக்க: இலக்கு குறைவாக இருக்கலாம், இந்தியாவை வெல்வது எளிதல்ல: நியூசி. வேகப் பந்துவீச்சாளர்

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான சாஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் (இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) கைப்பற்றினர். நோமன் அலி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

உடற்தகுதி சோதனையில் தோல்வி, பந்துவீச்சில் அசத்தல்

இடதுகை சுழற்பந்துவீச்சாளரான நோமன் அலி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பயிற்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோமன் அலி

உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்தபோதிலும், பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஆக்யூப் ஜாவத் ஆலோசனையின் அடிப்படையில் நோமன் அலி அணியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் விளையாடிவிட்டு அதே நாளில் இந்தியா சென்றுவிடுங்கள்; செவிசாய்க்குமா பிசிசிஐ?

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நோமன் அலிக்கு உடற்தகுதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் லெக் ஸ்பின்னரான ஜாகித் மஹ்முதும் கலந்துகொண்டார். இவர்கள் இருவராலும் 2 கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க விரும்புவதாக ஸ்ரேயாஸ் ஐயர் விருப்பம் தெரிவித்துள்ளார்.ரஞ்சி கோப்பை எலைட் தொடரில் மகாராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர... மேலும் பார்க்க

இலக்கு குறைவாக இருக்கலாம், இந்தியாவை வெல்வது எளிதல்ல: நியூசி. வேகப் பந்துவீச்சாளர்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கப் போவதில்லை என நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்க் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் விளையாடிவிட்டு அதே நாளில் இந்தியா சென்றுவிடுங்கள்; செவிசாய்க்குமா பிசிசிஐ?

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில... மேலும் பார்க்க

சச்சினுக்கு இருந்த அதே பிரச்னை..! 7 முறை சதமடிக்காமல் ஆட்டமிழந்த ரிஷப் பந்த்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். 90-100 ரன்களுக்குள் 7ஆவது முறையாக ஆட்டமிழந்துள்ளார். கிரிக்கெட்டில் இதற்கு நெர்வஸ் 90ஸ் என்பார்கள். சதம் அடிக்கும் முன்பு பதற்... மேலும் பார்க்க

ரச்சின் ரவீந்திரா, சர்ஃபராஸ் கானுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.இ... மேலும் பார்க்க