செய்திகள் :

ரச்சின் ரவீந்திரா, சர்ஃபராஸ் கானுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

post image

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையும் படிக்க: தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்..! 99 ரன்களில் ஆட்டமிழப்பு!

ரச்சின் ரவீந்திரா, சர்ஃபராஸ் கான் சதம்

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தினார். அவர் 157 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்திய அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி இந்திய வீரர்கள் ரன்கள் குவித்தனர். கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் அரைசதம் கடந்து அசத்தினர். சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பந்த் இடையேயான பார்ட்னர்ஷிப் இந்திய அணி முன்னிலை பெற காரணமாக அமைந்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 195 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 18 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவருக்கும் சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)

ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் குறித்து அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நமது பூர்வீகத்துடன் நம்மை இணைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு இருக்கிறது. ரச்சின் ரவீந்திராவுக்கும் பெங்களூருவுக்கும் சிறப்பான பிணைப்பு இருக்கிறது. ரச்சின் ரவீந்திரா பெங்களூவை பூர்வீகமாக கொண்டவர். அவரது குடும்பத்தினர் பெங்களூவைச் சேர்ந்தவர்கள். அவரது பெயரில் மேலுமொரு சதம் சேர்ந்துள்ளது.

இந்திய அணிக்கு மிகவும் தேவையான சூழலில் சர்ஃபராஸ் கான் அவரது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார். எப்படிப்பட்ட சிறப்பான தருணம். திறமை வாய்ந்த இளம் வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் விளையாடிவிட்டு அதே நாளில் இந்தியா சென்றுவிடுங்கள்; செவிசாய்க்குமா பிசிசிஐ?

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில... மேலும் பார்க்க

சச்சினுக்கு இருந்த அதே பிரச்னை..! 7 முறை சதமடிக்காமல் ஆட்டமிழந்த ரிஷப் பந்த்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். 90-100 ரன்களுக்குள் 7ஆவது முறையாக ஆட்டமிழந்துள்ளார். கிரிக்கெட்டில் இதற்கு நெர்வஸ் 90ஸ் என்பார்கள். சதம் அடிக்கும் முன்பு பதற்... மேலும் பார்க்க

தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்..! 99 ரன்களில் ஆட்டமிழப்பு!

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் புதிய சாதனையை படைத்துள்ளார். 62 இன்னிங்ஸில் 2,500 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பாக எம்.எஸ்.தோனி 69 இன்னிங்ஸில் இந்த சாதனையை தன்வ... மேலும் பார்க்க

மகளிர் டி20: முதல்முறையாக கோப்பையை வெல்லப்போவது யார்?

மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தும் தென்னாப்பிரிக்கா அணியும் நாளை (அக்.20) இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. 2009இல் தொடங்கிய மகளிர் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. ... மேலும் பார்க்க

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!

இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த அக்.16 அன்று பெங்களூரில் தொடங்கியது. முதல்நாள் மழையினால் பாதிக்க 2ஆம் நாளில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய நியூசில... மேலும் பார்க்க