செய்திகள் :

உ.பி: பசு வதை வழக்கில் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

post image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக பசு வதை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.

சாஹரன்பூர் மாவட்டத்தின் தில்பாரா பகுதியில் நேற்று (மார்ச் 17) இரவு நானோட்டா காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நோக்கி காவல் துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களது வாகனம் சறுக்கி இருவரும் கீழே விழுந்ததுள்ளனர். பின்னர், அவர்களை விரட்டிய காவலர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸாரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முயன்றதாகக்கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: 2024-ல் இந்திய எல்லையில் 294 டிரோன்கள் பறிமுதல்: மத்திய அரசு தகவல்

இதற்கு காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவர்களில் ஒருவரான ஷாம்லி பகுதியைச் சேர்ந்த ஜாவெத் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

அவர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு தற்போது காவல் துறையினர் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், இருளில் தப்பியோடிய அவரது கூட்டாளியான முஹம்மது ஃபுர்கான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜாவெத் மீது ஏற்கனவே கேங்ஸ்டர் வழக்கு மற்றும் சட்டவிரோத பசு வதை வழக்கு ஆகியவைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டுகள், பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனம் மற்றும் கால்நடைகள் பலியிட பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சட்டப்பேரவைய... மேலும் பார்க்க

பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!

விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் ஆபரணத் தங்கத்திந் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்... மேலும் பார்க்க

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: இபிஎஸ் வாழ்த்து

சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும் பார்க்க