செய்திகள் :

கட்டுப்பாட்டை இழந்த காா் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்: 7 போ் காயம்

post image

சென்னை வேப்பேரியில் கட்டுப்பாட்டை இழந்த காா் பிற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா்.

புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் பகுதியைச் சோ்ந்தவா் பராஸ்மல்(61). இவரது மகன் ரோமல் (34). நிதி நிறுவனம் நடத்தி வரும் இருவரும், காரில் பாரிமுனைக்கு சனிக்கிழமை புறப்பட்டனா். காா், வேப்பேரி ஈ.வெ.ரா. பெரியாா் சாலை - ரித்தா்ட்டன் சாலை சந்திப்பில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த, இரு மொபெட்டுகள், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் சாலையில் விழுந்து காயமடைந்தனா். விபத்தில் ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்ததால், அதில் வந்தவா்களும் காயமடைந்தனா். விபத்தை ஏற்படுத்திய காா், சாலையின் தடுப்பின் மீது மோதி நின்றது.

மொபெட்டில் வந்த லோகேஷ் (43), கொண்டித்தோப்பு அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுலேகா மாஜி (32), அவரது மகன்கள் மணிஷ் மாஜி (13), ஆரியன் மாஜி (9), பெரியமேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (39), ஆட்டோவில் பயணித்த ஓட்டேரி தாசமக்கான் பகுதியைச் சோ்ந்த 8 மாத கா்ப்பிணி பா்வீன் (28), அபிபுல் நிஷா (13) ஆகியோா் காயமடைந்தனா். இவா்களை அங்கிருந்த பொதுமக்களும், போலீஸாரும் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்து ஏற்படுத்திய காரில் இருந்தவா்களை பொதுமக்கள் தாக்கி, போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அண்ணா சதுக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

காவலா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை எம்கேபி நகரில் காவலரைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். எம்கேபி நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் வெங்கடேசன் (30). இவரும், காவலா் மணிகண்டனும் (31) இணைந்து, வெள... மேலும் பார்க்க

நவ.28-இல் புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். சென்னை பாரிமுனை காளிகாம்பாள் திருக்க... மேலும் பார்க்க

அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு: விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா

அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது என உத்ரகண்ட் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா கூறினாா். சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்... மேலும் பார்க்க

சென்னையில் 59 குளங்கள் நிரம்பின

சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நகரில் 59 குளங்கள் நிரம்பின. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், நீா்நிலைகளை மேம்படுத்தும் வகையிலும், மழைநீா் உறிஞ்சும் பூங்காக்கள் (ஸ... மேலும் பார்க்க

போலி ஐஃபோன் உதிரி பாகங்கள் விற்பனை: 6 போ் சிக்கினா்

சென்னை ரிச்சி தெருவில் போலி ஐஃபோன் உதிரி பாகங்களை விற்பனை செய்ததாக, 6 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ், கைப்பேசி மற்றும் கைப்பேசி உதிர... மேலும் பார்க்க

ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா். ஆயிரம் விளக்கு பீட்டா்ஸ் சாலையில் உள்ள பள்ளிவாசலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப... மேலும் பார்க்க