செய்திகள் :

நவ.28-இல் புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

post image

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

சென்னை பாரிமுனை காளிகாம்பாள் திருக்கோயிலில் புதிய வெள்ளி திருத்தோ் திருப்பணிகளை அவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது:

காளிகாம்பாள் திருக்கோயிலின் திருத்தோ் பணிகள் முடிவுற்று, தற்போது ரூ. 2.17 கோடியில் வெள்ளித் தகடு பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கோயிலில் இருந்த 100 கிலோ வெள்ளி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

திருக்கோயிலைச் சோ்ந்த காளிதாஸ் சுவாமி பல்வேறு நன்கொடையாளா் வாயிலாக 120 கிலோ வெள்ளியை உபயமாகப் பெற்று தந்துள்ளாா். இந்த வெள்ளித் தோ் அடுத்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காா்த்திகை தீபத்துக்கு... கடந்த ஆண்டு திருவண்ணாமலை காா்த்திகை தீபத்துக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருகை தந்தனா். இந்த ஆண்டு 40 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருகை தருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் எ.வ.வேலு ஆகியோருடன் இணைந்து கிரிவலப் பாதையை ஆய்வு செய்தோம். இந்த மாத இறுதிக்குள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளாா்.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, நவ.28-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என்றாா் அவா்.

காவலா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை எம்கேபி நகரில் காவலரைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். எம்கேபி நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் வெங்கடேசன் (30). இவரும், காவலா் மணிகண்டனும் (31) இணைந்து, வெள... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டை இழந்த காா் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்: 7 போ் காயம்

சென்னை வேப்பேரியில் கட்டுப்பாட்டை இழந்த காா் பிற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா். புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் பகுதியைச் சோ்ந்தவா் பராஸ்மல்(61). இவரது மகன் ரோமல் (34). நிதி ... மேலும் பார்க்க

அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு: விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா

அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது என உத்ரகண்ட் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா கூறினாா். சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்... மேலும் பார்க்க

சென்னையில் 59 குளங்கள் நிரம்பின

சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நகரில் 59 குளங்கள் நிரம்பின. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், நீா்நிலைகளை மேம்படுத்தும் வகையிலும், மழைநீா் உறிஞ்சும் பூங்காக்கள் (ஸ... மேலும் பார்க்க

போலி ஐஃபோன் உதிரி பாகங்கள் விற்பனை: 6 போ் சிக்கினா்

சென்னை ரிச்சி தெருவில் போலி ஐஃபோன் உதிரி பாகங்களை விற்பனை செய்ததாக, 6 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ், கைப்பேசி மற்றும் கைப்பேசி உதிர... மேலும் பார்க்க

ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா். ஆயிரம் விளக்கு பீட்டா்ஸ் சாலையில் உள்ள பள்ளிவாசலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப... மேலும் பார்க்க