செய்திகள் :

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 % போனஸ் தமிழ்நாடு அரசு உத்தரவு

post image

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக் கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு, 20 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.

உபரித் தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்கள் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை அளிக்கப்படும்.

குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்கள் பணிபுரிந்து, போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்கள்: போனஸ் சட்டத்தின்கீழ் வராத லாபம் ஈட்டாத தலைமை, மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்கள் இருந்தால் அவற்றில் பணியாற்றும் பணியாளா்களுக்கும் கருணைத் தொகைகள் வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக, தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கப் பணியாளா்களுக்கு ரூ.3,000, தொடக்க சங்கங்களில் பணிபுரிவோருக்கு ரூ. 2,400 வழங்கப்படும்.

இதன்மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை, மத்திய, மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 43,683 பணியாளா்களுக்கு ரூ.44.42 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ஆராய்ச்சி நூலக வளா்ச்சி பணிகளுக்கு நிதியுதவி

சென்னை: சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் ரூ.20 லட்சம் நி... மேலும் பார்க்க

‘குழந்தைகளுக்கு மழலைக் கல்வியிலிருந்து தமிழ் கற்பித்தல் அவசியம்’

சென்னை: குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என இராமலிங்க அடிகளின் கொள்ளுப்பேத்தியும், உணவுப் பொருள் வழங்கல்... மேலும் பார்க்க

13 விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 1 கோடிக்கு நலத் திட்ட உதவி துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

சென்னை: பல்வேறு பிரிவுகளில் களமாடவுள்ள 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.இதற்கான நிகழ்ச்சி, சென்னையிலுள்ள அவரது முகாம் அ... மேலும் பார்க்க

ரெப்கோ வங்கிக்கு இரட்டை விருது

சென்னை: ரெப்கோ வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது.இது குறித்து ரெப்கோ வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:லக்னௌவில் கடந்த அக்.18, 19 ஆகிய தேதிகளில் தேசிய... மேலும் பார்க்க

அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சாதனை: 19 நிறுவனங்களுக்கு பாராட்டு

திருவொற்றியூா்: சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சிறப்பாக வணிகம் செய்த 19 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் நகை, புத்தாடை, பட... மேலும் பார்க்க