செய்திகள் :

சென்னையில் 'இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்' - பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

post image

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழ்நாடு தொழில் துறை சார்பில் ஆட்டோ ஓட்டுவதற்கு விருப்பமுள்ள பெண்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க 'இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்' கொண்டுவரப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு, பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது, புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது, அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.

அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல்துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான தகுதிகள்:

i.பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ii. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

iii. 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

iv. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

v. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

vi. சென்னையில் குடியிருக்க வேண்டும்.

இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சிஎன்ஜி/ஹைபிரிட் (CNG/Hybrid) ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும்.

சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு, 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை – 600 001 என்ற முகவரிக்கு 23 .11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிர... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா? மு.க. ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா? என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 22) கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்... மேலும் பார்க்க

தீபாவளியை கொண்டாட சென்னை தயாரா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் காவல்துறை மேற்கொண்டுள்ளது.கூட்டத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் கொ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சில நாள்களே உள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜ... மேலும் பார்க்க

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள... மேலும் பார்க்க