செய்திகள் :

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்! முழு விவரம்

post image

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல்வேறு ரயில்கள் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது.

இன்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவிருந்த சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரத்தை நோக்கி சென்றதால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது.

இந்நிலையில், பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள பாலத்தில் இருந்த வெள்ள நீர் வடிந்ததால், ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தப்பியது சென்னை! ஆந்திரம் நோக்கிச் செல்லும் தாழ்வு மண்டலம்

ஏற்காடு, நீலகிரி, காவேரி, சேரன் உள்ளிட்ட ரயில்கள் வேறு ரயில் நிலையங்களில் இன்று காலை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வழக்கம்போல் வந்துசேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவைக்கு இன்று காலை 6 மணிக்கு புறப்படவிருந்த கோவை விரைவு ரயில், காலை 10 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்கள் வேறு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கம்போல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைசூரு - சென்னை காவேரி ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க