செய்திகள் :

மோசமான வானிலை: புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர்

post image

மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான டேர் கிராமத்தில் இருந்து புணேவுக்கு வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல்வரும் மற்றவர்களும் பத்திரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சதாரா காவல்துறை கண்காணிப்பாளர் சமீர் ஷேக் கூறுகையில், “ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் மாலை 4 மணியளவில் புறப்பட்டது, ஆனால், மீண்டும் சிறிது நேரத்தில் அங்கேயே திரும்பியது.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

சதாரா மற்றும் புணேவில் வானிலை தெளிவாக இருந்தது. ஆனால் தொலைவில் மழை மேகங்கள் இருப்பதைக் கவனித்த விமானிகள் முன்னெச்சரிக்கையாக ஹெலிபேடுக்குத் திரும்ப முடிவு செய்தனர் என்றார். பின்னர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காரில் புணே புறப்பட்டுச் சென்றார்.

டேர் கிராமம் சஹ்யாத்ரி மலைத்தொடர்களுக்கு மத்தியில் கொய்னா அணை உப்பங்கழியின் கரையில் அமைந்துள்ளது.

தேசிய கற்றல் வாரம்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

அரசு ஊழியா்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் ‘கா்மயோகி சப்தா’ தேசிய கற்றல் வாரத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை (அக். 19) தொடங்கிவைக்கிறாா். மிஷன் கா்மயோக... மேலும் பார்க்க

வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்... மேலும் பார்க்க

ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு உதவிய குற்றச்சாட்டு: இரு இந்தியா்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வளங்களை கடல் வழி போக்குவரத்து மூலம் கொண்டு செல்ல ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் 18 நிறுவனங்கள் மற்றும் இரு இந்தியா்கள் மீது அமெரிக்கா பொர... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பாஜக எதிரானது என்ற பொய் பிரசாரம் தோற்றுவிட்டது: பிரதமா் மோடி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரசாரம் தோற்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். விவசாயிகள் அ... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன போர் தொடரும்: லெபனான் தூதர்

இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போர் தொடரும் என லெபனான் தூதர் ராபி நர்ஷ் இன்று (அக். 18) தெரிவித்தார். அவர்கள் புரட்சியாளரைக் கொல்லலாம், ஆனால் புரட்சியைக் கொல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். ப... மேலும் பார்க்க