செய்திகள் :

டி20 சாம்பியன்-ஷிப் தொடர்: பாபர் அசாம், நசீம் ஷா விலகல்!

post image

தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்பட்டது. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடத்தப்பட்டன. மைதான பராமரிப்புகளுக்காக ரூ.1800 கோடி செலவு செய்த பாகிஸ்தான் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.

இதனால், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

இதில், முன்னாள் கேப்டன் பாபர் அசாம், தற்போதைய கேப்டன் முகமது ரிஸ்வான், வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா உள்பட அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அந்த அணியை அறிவிக்கும் போது மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் இந்த வீரர்கள் ஃபைசலாபாத்தில் தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் விளையாடுவார்கள் என்று சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த நிலையில், வரவிருக்கும் போட்டிகளைக் கருத்தில் கொண்டு, பாபர் அசாம், நசீம் ஷா இருவரும் தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து விலகியுள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.

இவர்கள் போட்டியில் இருந்து விலகியிருப்பது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் பிஎஸ்எல் போட்டிக்காகத்தான் இருக்கும் என்று மூத்த வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாபர் அசாம் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் தரப் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!

ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் மார்ச் 22 ஆம் ... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், மொத்தமாக 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்... மேலும் பார்க்க

ஆஸி.யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது. நேற்றிரவு நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 220/7 ரன்கள் எடுத்தது. அத... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் கோலாகலம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.வட இந்தியாவில் பெரியளவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்தப்படும். ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள... மேலும் பார்க்க

மகளிர் பிரிமீயர் லீக் எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 214 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினே... மேலும் பார்க்க