செய்திகள் :

டென்மார்க் பயணித்த சிறிய விமானம் சுவிட்சர்லாந்தில் விபத்து! 3 பயணிகள் பலி?

post image

டென்மார்க் நாட்டு சிறிய விமானம் சுவிட்சர்லாந்தின் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த எக்ஸ்ட்ரா ஈஏ-400 எனும் சிறிய ரக விமானம் ஒன்று கடந்த மார்ச் 13 அன்று சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்தடைந்தது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 17) மாலை 5.20 மணியளவில் மீண்டும் டென்மார்க் செல்வதற்காக சேம்டன் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட போது தென்கிழக்கு சுவிட்சர்லாந்திலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:தெற்கு ஸ்பெயினில் கடும் வெள்ளம்! நிரம்பிய நீர்நிலைகள்...மக்கள் வெளியேற்றம்!

இதனைத் தொடர்ந்து, புறப்பட்ட 2 நிமிடங்களில் இந்த விபத்து நிகழ்ந்து அந்த விமானம் முழுவதுமாக எரிந்து சாம்பலானதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ள நிலையில் அதில் பயணித்த 3 பேரும் பலியாகியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது வரை எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் இந்த விமானத்தில் பயணித்தவர்களை முறையாக அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சட்டப்பேரவைய... மேலும் பார்க்க

பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!

விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் ஆபரணத் தங்கத்திந் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்... மேலும் பார்க்க

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: இபிஎஸ் வாழ்த்து

சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும் பார்க்க