செய்திகள் :

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

post image

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க விரும்புவதாக ஸ்ரேயாஸ் ஐயர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை எலைட் தொடரில் மகாராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி அசத்தினார். அவர் 190 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

29 வயதாகும் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிவுப்பு பந்து போட்டிகளில் தனது முதல் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்திருந்தார்.

இதையும் படிக்க: உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்தவரால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி!

டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க விருப்பம்

மும்பை அணிக்காக சதம் விளாசிய பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சதம் அடித்தது சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு சிவப்பு பந்து போட்டிகளில் சதம் விளாசியது மகிழ்ச்சியளிக்கிறது. காயம் காரணமாக என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. ஆனால், நீண்ட நாள்களுக்குப் பிறகு சதம் அடித்துள்ளது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளது.

இதையும் படிக்க: இலக்கு குறைவாக இருக்கலாம், இந்தியாவை வெல்வது எளிதல்ல: நியூசி. வேகப் பந்துவீச்சாளர்

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், எதுவும் நமது கைகளில் இல்லை. தொடர்ச்சியாக எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளேன் என்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை.

ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்தவரால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்த வீரர் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார்.பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போ... மேலும் பார்க்க

இலக்கு குறைவாக இருக்கலாம், இந்தியாவை வெல்வது எளிதல்ல: நியூசி. வேகப் பந்துவீச்சாளர்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கப் போவதில்லை என நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்க் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் விளையாடிவிட்டு அதே நாளில் இந்தியா சென்றுவிடுங்கள்; செவிசாய்க்குமா பிசிசிஐ?

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில... மேலும் பார்க்க

சச்சினுக்கு இருந்த அதே பிரச்னை..! 7 முறை சதமடிக்காமல் ஆட்டமிழந்த ரிஷப் பந்த்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். 90-100 ரன்களுக்குள் 7ஆவது முறையாக ஆட்டமிழந்துள்ளார். கிரிக்கெட்டில் இதற்கு நெர்வஸ் 90ஸ் என்பார்கள். சதம் அடிக்கும் முன்பு பதற்... மேலும் பார்க்க

ரச்சின் ரவீந்திரா, சர்ஃபராஸ் கானுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.இ... மேலும் பார்க்க