செய்திகள் :

திருச்சி: அதிமுக மாவட்டச் செயலாளருக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் ஐ.டி ரெய்டு!

post image

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

10 - க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் திருச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் அந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் இளங்கோவன். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன், மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர். எடப்பாடிக்கு நெருக்கமானவர் என்பதால், இவர் சம்பந்தப்பட்ட இடங்களில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், இவருக்கு திருச்சி மாவட்டம், முசிறி அருகே துறையூர் சாலையில் எம்.ஐ.டி. பாலிடெக்னிக் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் கல்வி நிலையங்கள் உள்ளன. அந்தக் கல்வி நிலையங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இளங்கோவன்

10 - க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் திருச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் அந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமானவராக கருதப்படும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் இ.டி சோதனை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராகக் கருதப்படுபவருக்குச் சொந்தமான இடத்தில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் சிறையில் கைதி சித்ரவதை... சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சி... மேலும் பார்க்க

நகை, பணத்துக்காக மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொடூர கொலை... திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (65). இவரது கணவர் சுப்பையன் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லட... மேலும் பார்க்க

"நான் வாழாவெட்டியா இருக்க வேணா.." - மாமியார் கொடுமை பற்றி ஆடியோ அனுப்பி தற்கொலை செய்த இளம் பெண்

கோவை கோயில்பாளையம் சக்தி பிரதானச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சுருதி பாபு (24). சுருதி பாபுவுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஏப்... மேலும் பார்க்க

Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோரிஸ் சாமுவேல் கிறிஸ்ட... மேலும் பார்க்க

சுமங்கலி விரதம் முடித்து, கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி... என்ன நடந்தது?

வட இந்தியாவில் கணவன் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் கர்வா செளத் எனப்படும் ஒரு வித பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து நிலவு வெளிச்சத்தில் கணவன் முகத்தை பார... மேலும் பார்க்க

"இர்ஃபான் செயல் கண்டிக்கத்தக்கது; புகார் அளித்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை... மேலும் பார்க்க