செய்திகள் :

நகை, பணத்துக்காக மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொடூர கொலை... திருப்பூரில் நடந்தது என்ன?

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (65). இவரது கணவர் சுப்பையன் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் வசித்து வருகின்றனர். கண்ணம்மாள் மட்டும் காரணம்பேட்டை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி வீட்டில் இருந்த கண்ணம்மாள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதோடு பீரோவை சுற்றி மிளகாய் பொடியையும் தூவிச் சென்றது தெரியவந்தது.

கண்ணம்மாள்

தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் கண்ணம்மாளின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக்குப்தா உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்தக் கொலை தொடர்பாக மூவரை பல்லடம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் பேசியபோது, "கண்ணம்மாள் கொலை தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் கருத்தபாண்டி (27), அதே ஊரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் இசக்கிமுத்து(41), கொடிமுத்து மகன் இசக்கிமுத்து (27) ஆகிய மூவரை கேரளத்துக்கு தப்பிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணம்மாள் வசித்து வந்த வீட்டின் அருகே முருகேசன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். அங்கு அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சமையலராக இரண்டு வருடமாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தனியாக வசித்து வந்த கண்ணம்மாள் ஏராளமான நகைகளை அணிந்திருந்ததை நோட்டமிட்டு வந்த பாஸ்கரன் அவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார். இதனையடுத்து ஊரில் உள்ள நண்பர்களான கருத்தபாண்டி, இசக்கிமுத்து, மற்றொரு இசக்கிமுத்து, மேலும் ஒருவர் என நான்கு பேரை காரணம்பேட்டை பகுதிக்கு பாஸ்கரன் அழைத்து வந்துள்ளார்.

கைது

கடந்த 18-ஆம் தேதி இரவு கண்ணம்மாள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். உறவினர்கள் வந்திருப்பதாக எண்ணி கதவைத் திறந்தவரின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கண்ணம்மாளின் கை கால்களை கட்டிப் போட்டு மூச்சை அடைத்து கொலை செய்துள்ளனர். அவர் அணிந்திருந்த 15 பவுன் நகைகளையும், பீரோவில் இருந்த பணத்தையும் பாஸ்கரன் உள்ளிட்டோர் திருடிச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 9 பவுன் தங்க செயின், மற்றும் இரண்டு வளையல்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பாஸ்கரன் உள்ளிட்ட இரண்டு முக்கியக் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

வேலூர் சிறையில் கைதி சித்ரவதை... சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சி... மேலும் பார்க்க

திருச்சி: அதிமுக மாவட்டச் செயலாளருக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் ஐ.டி ரெய்டு!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.10 - க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ச... மேலும் பார்க்க

"நான் வாழாவெட்டியா இருக்க வேணா.." - மாமியார் கொடுமை பற்றி ஆடியோ அனுப்பி தற்கொலை செய்த இளம் பெண்

கோவை கோயில்பாளையம் சக்தி பிரதானச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சுருதி பாபு (24). சுருதி பாபுவுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஏப்... மேலும் பார்க்க

Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோரிஸ் சாமுவேல் கிறிஸ்ட... மேலும் பார்க்க

சுமங்கலி விரதம் முடித்து, கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி... என்ன நடந்தது?

வட இந்தியாவில் கணவன் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் கர்வா செளத் எனப்படும் ஒரு வித பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து நிலவு வெளிச்சத்தில் கணவன் முகத்தை பார... மேலும் பார்க்க

"இர்ஃபான் செயல் கண்டிக்கத்தக்கது; புகார் அளித்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை... மேலும் பார்க்க