செய்திகள் :

மகா., சட்டமன்ற தேர்தல்: இறங்கிவந்து காங்கிரஸ்.. தொகுதி பங்கீட்டை போராடி முடித்த எதிர்க்கட்சி கூட்டணி

post image

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இப்பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆளும் மகாயுதி கூட்டணி நேற்றே தொகுதி பங்கீட்டுக்கு தீர்வு கண்டுவிட்டது. கூட்டணி தலைவர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இறுதி முடிவை எட்டினர். இதில் பா.ஜ.க 155 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 78 தொகுதியிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதியிலும் போட்டியிட இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுத்தடித்துக்கொண்டே சென்றது.

எதிர்க்கட்சிகளின் சின்னம்

விதர்பாவில் 12 தொகுதிகளுக்கும், மும்பையில் 3 தொகுதிகளுக்கும் தீர்வு காணப்படாமல் இருந்தது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் தங்களது முடிவில் உறுதியாக இருந்தன. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் இப்பிரச்னை குறித்து டெல்லிக்கு சென்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பிரச்னையை இழுத்தடிக்க வேண்டாம் என்றும், விரைவில் பேசித்தீர்க்கும்படியும் கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.

அதோடு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கட்சி தலைமை மூத்த தலைவர் பாலாசாஹேப் தோரட்டை அவசரமாக மும்பைக்கு அனுப்பி வைத்தது. பாலாசாஹேப் தோரட் நேற்று மும்பை வந்து முதலில் சரத் பவாரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து நீண்ட நேரம் பேசினார். அதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவருடன் நீண்ட நேரம் பேசினார். நேற்றே தொகுதி பங்கீடு முறைப்படி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இரவுதான் பங்கீடு முடிவானது. இதையடுத்து இன்று முறைப்படி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது எட்டப்பட்டுள்ள முடிவின் படி எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 105 தொகுதியிலும், சிவசேனா 95 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 84 தொகுதியிலும் போட்டியிடும். எஞ்சிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்படும். மும்பையில் உத்தவ் தாக்கரே கட்சி 18 தொகுதியிலும், காங்கிரஸ் 14 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதியிலும் போட்டியிடும். மும்பையில் பாந்த்ரா கிழக்கு, பைகுலா, வர்சோவா தொகுதிகள் குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.


தொகுதிக்காக கட்சி மாறிய தலைவர்கள்

நவிமும்பை பா.ஜ.கவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கணேஷ் நாயக் மகன் சந்தீப் நாயக், இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அவர் கேட்ட தொகுதிக்கு பா.ஜ.க ஏற்கனவே வேட்பாளரை அறிவித்துவிட்டது. இதனால் சந்தீப் நாயக் சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வந்தார். ஆனால் இப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தலைமையில் சந்தீப் நாயக் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் 30 பேருடன் அவர் சரத் பவார் கட்சியில் சேர்ந்தார். பேலாப்பூர் தொகுதியில் சந்தீப் நாயக் போட்டியிடுவார் என்பதை ஜெயந்த் பாட்டீலும் உறுதிபடுத்தினார்.

2019ம் ஆண்டு வரை கணேஷ் நாயக் மற்றும் அவரது மகன் ஆகியோர் சரத்பவார் கட்சியில்தான் இருந்தனர். அதன் பிறகுதான் பா.ஜ.கவில் சேர்ந்தனர். பா.ஜ.கவில் இருந்து விலகவேண்டாம் என்று தனது மகனிடம் கணேஷ் நாயக் கேட்டுக்கொண்டார். ஆனால் தந்தையின் ஆலோசனையை மீறி சந்தீப் நாயக் சரத் பவார் கட்சியில் இணைந்துள்ளார். இதே போன்று முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க எம்.பியுமான நாராயண் ராணே மகன் நிலேஷ் ராணே தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துள்ளார். அவர் கொங்கன் பகுதியில் உள்ள குடால் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இர்ஃபான்: பாலினம் அறிதல் டு தொப்புள்கொடி அறுப்பு - `கானல் நீர்’ நடவடிக்கை - திருத்துமா அரசு?

யூடியூபர் இர்ஃபான் சர்ச்சைக்குரிய வீடியோக்களை தனது யூ-டியூப் சேனலில் வெளியிடுவதும், பின்னர் சட்டரீதியிலான குற்றச்சாட்டுகள் எழ அதை நீக்குவதும், இதை தமிழக அரசு கண்டிப்பதுபோல கண்டித்து பெரிய அளவில் நடவடி... மேலும் பார்க்க

வைத்திலிங்கம்: 5 கார்கள், 10 அதிகாரிகள், தொடரும் ED ரெய்டு; கோஷமிடும் ஆதரவாளர்கள் - தஞ்சை நிலவரம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார்.இந்நி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாராமதியில் மீண்டும் பவார்கள் மோதல்; அஜித் பவாரை எதிர்த்துப் போட்டியிடும் சகோதரர் மகன்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது. ஆனால், கட்சிகள் இன்னும் முழுமையாகத் தொகுதிப் பங்கீட்டை முடிக்காமல் இருக்கின்றன. மற்றொரு புறம் தங்களது கட்சிகளில... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நில அபகரிப்பு புகாரளித்த அறப்போர் இயக்கம்... மறுக்கும் தனியார் நிறுவனம்!

Noதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது மகன்கள் மூலம் டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில், சென்னை ஜி.எஸ்.டி சாலையில் ரூ.411 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் 31,378 சதுர ... மேலும் பார்க்க

ED Raid: தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய வழக்கு; வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையிட்டு வருகிறது.2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்பு... மேலும் பார்க்க

மதுரை: "ஆஸ்பத்திரிக்குக் கூட 5 கிமீ செல்ல வேண்டியுள்ளது" - பேருந்து வசதி கோரும் சித்தாலி கிராமம்

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், வில்லூர் பிட்-2 பகுதியைச் சேர்ந்த கிராமம் சித்தாலி. இந்த ஊரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குப் பேருந்து வசதி இல்லாததால், ஊர் மக்கள் 1.25 கி.... மேலும் பார்க்க