செய்திகள் :

தீபாவளி: காரில் சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு..

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து, காரில் சொந்த ஊர் செல்வோர், தாம்பரம்-பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சென்னையிலிருந்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல அமைச்சர் அறிவுரை வழங்கியருக்கிறார்.

தேவைக்கு ஏற்ப, தனியார் பேருந்துகளையும் தமிழக அரசு இயக்கவிருக்கிறது. இது குறித்து தனியார் பேருந்து நிறுவனங்களிடம் பேசப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளை ஏற்கனவே இயங்கி வந்த தனியார் நிறுவன ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கொண்டே இயக்கப்படும் என்பதால் பிரச்னை ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

இதையும் படிக்க.. தீபாவளியையொட்டி 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று காலை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த போது, சிறப்புப் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட தகவலில், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல அக்.28 முதல் 30-ஆம் தேதி வரை 11,176 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும்.

இதையும் படிக்க.. புரட்டாசி முடிந்து பட்டினப்பாக்கம் வந்த மக்களுக்குக் காத்திருந்த குழப்பம்!

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். பல்வேறு ஊர்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3 நாள்களுக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பிற ஊர்களில் 2,910 பேருந்துகளும் பண்டிகைக்குப் பின் சென்னை திரும்ப வசதியாக 9,441 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்ப 3,165 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் விடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெண... மேலும் பார்க்க

நாவரசு கொலை: ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன்

சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்ய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்றிரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் லேசா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் அதிகம் சிக்கிய அதிகாரிகள்.. எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்?

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், லஞ்சம் வாங்கி வழக்கில் சிக்கயி அதிகாரிகளை அதிகம் கொண்ட துறையாக ஊரக வளர்ச்சித் துறை இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இயங்கும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ... மேலும் பார்க்க

நெல்லை தனியார் பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடல்

நெல்லையில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை நடத்திய நிலையில், பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடப்பட்ட... மேலும் பார்க்க

அதிமுகவில் நடிகை கெளதமிக்கு முக்கிய பொறுப்பு!

அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கெளதமியை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.பாஜகவில் இருந்த நடிகை கெளதமி, கடந்த பிப்ரவரி மாதம் எடப்பா... மேலும் பார்க்க