செய்திகள் :

`துணையாக இருக்க மட்டும்தான் துரைமுருகன்; துணை முதல்வர் என்றால் அது உதயநிதிதான்' - ஆர்.பி.உதயகுமார்

post image

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் புதூரில் அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு  வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் துரைமுருகன் துணைக்கு வர வேண்டும்,

ஆர்.பி.உதயகுமார்

கருணாநிதிக்கு துணையாக இருக்க வேண்டும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும், இன்பநிதிக்கு துணையாக நிற்க வேண்டும். அமைச்சர் துரைமுருகன்.  வெட்கம், மானத்தை விட்டுவிட்டு துணை முதல்வர் பதவிக்கு என் பெயரை பரிந்துரை செய்யுங்கள் என்று  கெஞ்சிப் பார்த்தார்.

ஆனால் ஒன்றும் பருப்பு வேகவில்லை.  துணையாக இருப்பதற்கு மட்டும்தான் துரைமுருகன், துணை முதலமைச்சர் என்றால் அது உதயநிதிதான்.  இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாடல்.  ஒரு விவசாயி முதலமைச்சராக சாதனையை படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. வரும் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைப்பது உறுதி .

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

இதே கடந்த கால  பருவ மழை காலத்தில் பருவமழையை முறையாக கையாண்டது அ.தி.மு.க.  ஆட்சியில்தான்.  தற்போதைய தி.மு.க அரசுக்கு  பருவமழையை எதிர்கொள்ளத் தெரியவில்லை.” என்றார்.  

Udhayanidhi : `அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்!' - தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

"ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!" என்று தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ... மேலும் பார்க்க

`சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்களா? ஆணவம் நல்லதல்ல...’ - காட்டமான உயர் நீதிமன்றம்!

சிதம்பரம்: `தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல!’ - நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜெயசீலா என்ற பெண் பக்தை ஒருவரை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக, தர்ஷன் (எ) நடர... மேலும் பார்க்க

வாரிசுக்காக கொடுத்து வாங்கும் சகோதரர்கள்: உத்தவைத் தொடர்ந்து மகனை தேர்தலில் இறக்கும் ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உயிரோடு இருந்தவரை அவரது குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முதன் முதலில் உத்தவ் தாக்கரே ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: `நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்' - கமல் கண்டனம்

ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று கலந்துகொண்ட தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது ஏற்பட்ட குழப்பத்தில், `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' வ... மேலும் பார்க்க

ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள்? - போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுவது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில், மூன்று பேருந்துகளுக்கு `TN74 N 1813' என்ற ஒரே பதிவெண் உள்ளதாக, சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் ப... மேலும் பார்க்க

2026: திமுக-வில் சீனியர்களுக்கு வேட்டு? ; பொன்முடியின் ‘சீட்’ பேச்சு - பின்னணி என்ன?!

`சீட் கிடைக்காமல் போகலாம்!'விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேசும்போது, "விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க