செய்திகள் :

துப்பாக்கி முனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை!

post image

தில்லியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானியை துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஷிபு சிங், தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக். 18) பிற்பகலில் இரண்டு பேர் தங்களை கூரியர் பணியாளர்களாகக் காட்டிக் கொண்டு, ஷிபுவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும் ஷிபுவையும் அவரது மனைவியையும் துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை எதிர்த்த ஷிபுவை தாக்கிவிட்டு, அங்கிருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர்.

இதையும் படிக்க:வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல: விஜய்

இந்த சம்பவம் முழுவதையும் ஷிபு தனது மகனுக்கு போனில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினரிடம் ஷிபுவின் மகன் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஷிபுவையும் அவரது மனைவியையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: மருத்துவர் உள்பட 6 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 200 பேருக்கு உடல்நலக் குறைவு

துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டதால் 200 பேருக்கு ஒவ்வாமை உண்டாகி உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பஸ்கோரியா கிராமத்தில் துக்க நிகழ்ச... மேலும் பார்க்க

ராஜஸ்தான் கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் பலி: மோடி இரங்கல்

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்தி மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ல... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்கள் 15 நாள்களாக உண்ணாவிரதம்: பிரதமரை சந்திக்க கோரிக்கை!

புதுதில்லியில் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பருவநிலை விஞ்ஞானி சோனம் வாங்க்சக் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.லடாக் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் ம... மேலும் பார்க்க

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

தனது மனைவி நலமுடன் வாழ வேண்டுமென்பதற்காக உண்ணா நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார் பாஜக எம்.பி. ஒருவர்.கணவர் ஆரோக்கியமாக நெடுநாள் வாழ வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் இல்லத்தரசிகள் கடைப்பிடிக்கு... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே கருதுகிறது ராகுல் குடும்பம்: நவ்யா ஹரிதாஸ்

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே மட்டுமே ராகுல் காந்தி குடும்பம் கருதுவதாகவும், இதனை அந்த தொகுதி மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளா் நவ்யா ஹரிதாஸ் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க