செய்திகள் :

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

post image

தனது மனைவி நலமுடன் வாழ வேண்டுமென்பதற்காக உண்ணா நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார் பாஜக எம்.பி. ஒருவர்.

கணவர் ஆரோக்கியமாக நெடுநாள் வாழ வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் இல்லத்தரசிகள் கடைப்பிடிக்கும் விரதமே ‘கர்வா சௌத்’. இந்த விரதம் ஞாயிற்றுக்கிழமை (அக். 20) கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், தனது மனைவிக்காக கடந்த 25 ஆண்டுகளாக இவ்விரதத்தை கடைப்பிடித்து வருகிறார் பாஜக எம்.பி. பிரவீண் கண்டெல்வால். எதற்காக இப்படி? பாஜக எம்.பி. பகிர்ந்துள்ள தகவல்களைப் பார்ப்போம்..

“ஒரு குடும்பத்தை இயக்கும் இரு சக்கரங்களாக கணவனும் மனைவியும் விளங்குவதாகவே நான் நம்புகிறேன். அப்படியிருக்கையில், கணவரின் நலனுக்காக மனைவி இவ்விரதத்தை கடைப்பிடிக்கும்போது, தங்களின் மனைவி ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ வேண்டுமென்பதற்காக கணவர்களும் ஏன் இவ்விரதத்தை கடைபிடிக்கக்கூடாது? நான் கடந்த 25 ஆண்டுகளாக இவ்விரதத்தை கடைப்பிடித்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அன்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில், இதுவும் அன்பின் வெளிப்பாடே..!

கள்ளச்சாராயம் அருந்தி 37 போ் உயிரிழந்த சம்பவம்: பிகாரில் 7 பெண்கள் உள்பட 21 போ் கைது; 2 காவலா்கள் இடைநீக்கம்

பிகாரின் சரண், சிவான் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 37 போ் உயிரிழந்த நிலையில், அதில் தொடா்புடையதாக 7 பெண்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 2 காவலா்கள் பணி இடைநீக்க... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: மருத்துவர் உள்பட 6 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 200 பேருக்கு உடல்நலக் குறைவு

துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டதால் 200 பேருக்கு ஒவ்வாமை உண்டாகி உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பஸ்கோரியா கிராமத்தில் துக்க நிகழ்ச... மேலும் பார்க்க

ராஜஸ்தான் கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் பலி: மோடி இரங்கல்

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்தி மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ல... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்கள் 15 நாள்களாக உண்ணாவிரதம்: பிரதமரை சந்திக்க கோரிக்கை!

புதுதில்லியில் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பருவநிலை விஞ்ஞானி சோனம் வாங்க்சக் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.லடாக் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் ம... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே கருதுகிறது ராகுல் குடும்பம்: நவ்யா ஹரிதாஸ்

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே மட்டுமே ராகுல் காந்தி குடும்பம் கருதுவதாகவும், இதனை அந்த தொகுதி மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளா் நவ்யா ஹரிதாஸ் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க