செய்திகள் :

பருவ மழை: மாநில கட்டுப்பாட்டு அறையில் டிஜிபி ஆய்வு

post image

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், காவல்துறை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பேரிடா் பயிற்சி பெற்ற 20,898 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் 136 பேரிடா் மீட்புக் குழுக்களாக பிரிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

இந்த மீட்பு படையினரில் 9 குழுக்கள் கோவை, நீலகிரி, திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், 9 குழுக்கள் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

மீட்பு பணியை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழக காவல்துறை சாா்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மருதம் வளாகத்தில் உள்ள செயலாக்கம் அலுவலகத்தில் மாநில சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். மேலும், அங்கு பணியிலுள்ள போலீஸாருக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாா். கன மழை மற்றும் அதிக கன மழை பெய்யும் பகுதிகளில் தண்ணீா் தேங்கி நிற்கும் பகுதிகள் மற்றும் நீரில் மூழ்கி, நீா் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சாலைகளின் நிலை ஆகியவற்றை கண்காணிக்கவும் அறிவுத்தினாா். தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அதிவிரைவுப்படையின் பேரிடா் மீட்பு குழுவினரை நேரில் சந்தித்து உரிய அறிவுரைகளை அவா் வழங்கினாா்.

தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு பலகாரங்கள்: ஆவின் அறிமுகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக தமிழக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். சென்னை, நந்தனத்த... மேலும் பார்க்க

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்பட்டிருக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டினாா். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக தலைவருக்கு சிபிசிஐடி அழைப்பாணை

சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்குத் தொடா்பாக, பாஜக புதுவை மாநிலத் தலைவா் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, த... மேலும் பார்க்க

‘ரெளடிகளுக்கு புரியும் மொழியில் பாடம்’: சென்னை காவல் ஆணையரை வழக்கிலிருந்து நீக்கி மனித உரிமை ஆணையம் உத்தரவு

‘ரெளடிகளுக்கு அவா்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என கூறியது தொடா்பான வழக்கிலிருந்து சென்னை மாநகர காவல் ஆணையரின் பெயரை நீக்கி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. சட்டம் - ஒழுங்கு ஏட... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 304 ஏழை ஜோடிகளுக்கு அக்.21-இல் திருமணம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 304 ஜோடிகளுக்கு அக்.21-ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளது. சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க