தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு பைக்கில் சென்ற தம்பதியை வழிமறித்து மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
அம்மாபேட்டை காவல் சரகம், அருமலைக்கோட்டை கிராமம்,தொண்டான்தோப்பு பகுதியை சோ்ந்தவா் ராமையன் மகன் சரவணன் (43). இவா் பைக்கில் வியாழக்கிழமை தனது மனைவி உஷா (33), மகன் சாய்சரண் ஆகியோருடன் தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு நள்ளிரவு 1 மணியளவில் மலையா்நத்தம் ரோடு,பூண்டி மின்வாரிய பவா் ஸ்டேஷன் அருகே வந்தாா்.
அப்போது பின்னால் பைக்கில் முகமூடி அணிந்து வந்த 3 நபா்கள் அவா்களை வழிமறித்து அரிவாளைக் காட்டி மிரட்டி உஷா அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 4 கிராம் தோடு ஒரு ஜோடி, ரூ. 20 ஆயிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா் .