செய்திகள் :

புதிய வருமான வரி மசோதா மீது தொழில்துறையினா் கருத்து தெரிவிக்கலாம்: மத்திய நேரடி வரிகள் வாரியம்

post image

புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதன் மீது தொழில்துறை நிபுணா்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத் (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

‘முதலில் நம்பிக்கை; அடுத்து கணக்கு ஆய்வு’ என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய வருமான வரிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 1-ஆம் தேதி தெரிவித்தாா்.

மேலும், இந்த புதிய சட்ட மசோதா, தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம், 1961-ஐ காட்டிலும் எளிமையாகவும், எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் அமையும் எனவும் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், இதுகுறித்து ரவி அகா்வால் கூறியதாவது: புதிய வருமான வரி வரைவு மசோதா சா்வதேச தரத்தில் 6 மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோா் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பழைய நடைமுறைகள் நீக்கப்படவுள்ளன. எனவே, நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டவுடன் எவ்வித தயக்கமுமின்றி தொழில்துறையினா் கருத்து கூறலாம்.

அவா்களின் கருத்துகள் பரிசீலிக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றாா்.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க