செய்திகள் :

மருத்துவர்களை இன்று சந்திக்கும் மமதா: உண்ணாவிரம் கைவிடப்படுமா?

post image

கொல்கத்தாவில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இளநிலை மருத்துவர்களை முதல்வர் மமதா பானர்ஜி திங்கள்கிழமை மாலை சந்திக்கிறார்.

மாலை 5 மணிக்கு மாநிலச் செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பின்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு மமதா மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்தே உண்ணாவிரதத்தை மருத்துவர்கள் கைவிடுவார்களா என்பது தெரிய வரும். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டாா். அவருக்கு நீதி கோரி, இளநிலை மருத்துவா்கள் 42 நாள்களாக முழு அளவில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பின்னா், மாநில அரசு அளித்த உறுதிமொழியைத் தொடா்ந்து, போராட்டத்தை பகுதி அளவாக குறைத்தனா்.

பிரியங்காவுக்காக வயநாடு தேர்தலில் சோனியா பிரசாரம்?

ஆனால், தனது உறுதிமொழியைக் காக்க மாநில அரசு தவறிவிட்டதாக கூறி, பல்வேறு மருத்துவமனைகளைச் சோ்ந்த இளநிலை மருத்துவா்கள் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவா்களைத் தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டம் திங்கள்கிழமை 17-ஆவது நாளாக தொடா்ந்துள்ளது.

அதில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஆறு மருத்துவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மேலும் எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசிய, முதல்வர் மமதா பெரும்பாலான கோரிக்கைகள் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டதாகக் கூறி, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர தேர்தல்: பாஜகவுடன் உத்தவ் தாக்கரே (சிவசேனை) பேச்சுவார்த்தை?

இந்திய அரசமைப்பின் எதிரிகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனை(உத்தவ் அணி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர... மேலும் பார்க்க

ஹரியாணா: அக்.25ல் தற்காலிக அவைத் தலைவராகப் பதவியேற்கிறார் ரகுவீர் சிங்!

சண்டீகர்: ஹரியாணா சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அக்டோபர் 25-ம் தேதி பதவியேற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15வது ஹரியாணா சட்டப் பேரவையின் தற்காலிக அவைத்தல... மேலும் பார்க்க

101-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் வி.எஸ்.அச்சுதானந்தன்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 101-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (அக். 20) கொண்டாடினாா். கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநி... மேலும் பார்க்க

போலி வெடிகுண்டு மிரட்டல்கள்... குற்றவாளிகள் விமானங்களில் பறக்கத் தடையா?

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளை விமானங்களில் பறப்பதற்கானத் தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக சிவில் விமான போக்குவரத்துத் துற... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம் ஒழுங்கை கையாள பாஜகவால் இயலவில்லை: ஆம் ஆத்மி

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாகச் சாடியது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் கூறியது, மக்களைக் குறிவைத... மேலும் பார்க்க