செய்திகள் :

மருத்துவ பரிசோதனை: 15,000 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி

post image

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவா்களது திசு மற்றும் ரத்த மாதிரிகள் உயா் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மாா்பகப் புற்றுநோய் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய்களைத் தவிா்க்கும் பொருட்டு 30 வயதைக் கடந்த அனைத்து மகளிருக்கும் அதற்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனுடன், 18 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டமும் முதல்கட்டமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூா், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது, 4 மாவட்டங்களிலும் சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மூலம் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.

அதன் கீழ் 2.2 லட்சம் பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4,618 பேருக்கு புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல, 1.75 லட்சம் பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கா்ப்பப்பை வாய் பரிசோதனையில் 9,331 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

அடுத்தகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு அது உறுதி செய்யப்படும். தேவையானவா்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படும். இைத்தவிர 5.24 லட்சம் பேருக்கு வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

பாதிப்பு அறிகுறிகள் உள்ள 2,555 பேருக்கு மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் பெண்கள் சுய மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ஆராய்ச்சி நூலக வளா்ச்சி பணிகளுக்கு நிதியுதவி

சென்னை: சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் ரூ.20 லட்சம் நி... மேலும் பார்க்க

‘குழந்தைகளுக்கு மழலைக் கல்வியிலிருந்து தமிழ் கற்பித்தல் அவசியம்’

சென்னை: குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என இராமலிங்க அடிகளின் கொள்ளுப்பேத்தியும், உணவுப் பொருள் வழங்கல்... மேலும் பார்க்க

13 விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 1 கோடிக்கு நலத் திட்ட உதவி துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

சென்னை: பல்வேறு பிரிவுகளில் களமாடவுள்ள 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.இதற்கான நிகழ்ச்சி, சென்னையிலுள்ள அவரது முகாம் அ... மேலும் பார்க்க

ரெப்கோ வங்கிக்கு இரட்டை விருது

சென்னை: ரெப்கோ வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது.இது குறித்து ரெப்கோ வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:லக்னௌவில் கடந்த அக்.18, 19 ஆகிய தேதிகளில் தேசிய... மேலும் பார்க்க

அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சாதனை: 19 நிறுவனங்களுக்கு பாராட்டு

திருவொற்றியூா்: சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சிறப்பாக வணிகம் செய்த 19 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் நகை, புத்தாடை, பட... மேலும் பார்க்க